அடுத்த படமும் ட்ராப்… என்ன ஆச்சு சூரியாவுக்கு..? புது இயக்குனருடன் படம் அறிவிப்பு..

அடுத்த படமும் ட்ராப்… என்ன ஆச்சு சூரியாவுக்கு..? புது இயக்குனருடன் படம் அறிவிப்பு..

என்னதாம்பா நடக்குது அங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு சூரியா படங்கள் குறித்த குழப்பங்களும், சந்தேகங்களும் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அவரது சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இயக்குனர்களின் படங்களில் இருந்து அவர் வெளியேறிக்கொண்டே இருப்பது, அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது.

சூரியா

நடிகர் சூரியா, முன்னணி நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது படங்கள் சரியாக போகவில்லை. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்துள்ள கங்குவா படம்தான் பெரிய எதிர்பார்ப்பை சூரியா ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் சூரியாவின் சமீப கால செயல்பாடுகள், அவரது ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

வணங்கான் விலகல்

இயக்குனர் பாலா, ஆகச்சிறந்த ஒரு படைப்பாளியாக பார்க்கப்படுகிறார். அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் முகம் சுளிக்க வைத்தாலும், ஒரு நல்ல திரைமொழி பேசக்கூடிய கலைஞராக தனது படங்களை படைத்துக்கொண்டு இருக்கிறார். நந்தா என்ற படம் மூலம் சூரியாவுக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்ததே அவர்தான்.

அவரது இயக்கத்தில் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறி விட்டார் சூரியா. இப்போது அந்த படத்தில் நடிகர் விஜயகுமார் மகன் அருண் விஜய் நடித்திருக்கிறார். ஆக, இந்த படத்தின் வாய்ப்பை சூரியா இழந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க..

வாடிவாசல் படத்தில் இருந்து எஸ்கேப்

அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாடிவாசல் படத்திலும் சூரியாதான் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க அமீரை, வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

வெற்றிமாறனிடம், அமீர் வேண்டாம். மோகன்லாலிடம் பேசி நான் தேதி வாங்கி தருகிறேன் என்று சூரியா கூறியிருக்கிறார். இந்த படத்துக்கு, இந்த கேரக்டருக்கு அமீர்தான் முக்கியம். உங்களுக்கு அவருடன் நடிக்க விருப்பமில்லை என்றால், விலகி விடுங்கள் என பதிலடி தந்திருக்கிறார் வெற்றிமாறன்.

அதுமட்டுமின்றி இது என்னுடைய படம். நான்தான் எதையும் முடிவு செய்வேன் என்றும் தீர்மானமாக கூறிவிட்டார். அதன்பிறகும் சூரியா தான் வாடிவாசலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரே ஒரு கட்டத்தில் நடிக்க விருப்பமின்றி வெளியேறி விட்டார்.

புறநானூறு படமும் டிராப்

அதன் பிறகு சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி, சூரியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சுதா கொங்காரா. அவரது புறநானூறு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த நடிகர் சூரியா இப்போது அந்த படத்தில் இருந்தும் விலகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..

ஏற்கனவே இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படம் டிராப்பானது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட் ஆகி விலகி விட்டார் சூரியா.

தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக்கி வந்த புறநானூறு படமும் டிராப் ஆகியிருக்கிறது.

என்னதான் ஆச்சு

இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் சூர்யா. இதை தொடர்ந்து, என்னதான் ஆச்சு சூர்யாவுக்கு என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வணங்கான், வாடிவாசல், புறநானூறு என அடுத்தடுத்த படங்கள் ட்ராப் ஆகிக்கொண்டே இருப்பதால், என்னாச்சு சூரியாவுக்கு என்று ரசிகர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், தனது 44வது புதிய படம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சூரியா.