சுற்றிவளைத்த கிராம மக்கள் செய்வதறியாது திகைத்த இந்தியன் 2 படக்குழு !

இந்தியன் 2

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்தே பல பிரச்சினைகள் இந்த படத்தை துரத்திக்கொண்டு வருகின்றன.

அதன்படி படம் ஆரம்பித்த புதிதில் செட்டில் கீழே விழுந்து 3 பேர் பலியானார்கள் அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது அதன் பிறகு இயக்குனர் சங்கர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை இயக்க ஆரம்பித்து விட்டார். தற்போது இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் சங்கர்.

இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்பு திருப்பதியில் உள்ள கடப்பாவில் தொடங்கியது . அங்கு கமலஹாசன் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதளத்தில் வைரலாக பரவியது.

தற்பொழுது செங்கல்பட்டு பனையூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை ஈனர்கள் சதுரங்கப் பட்டினத்தில் உள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில் தற்பொழுது சில சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.  இப்படி படப்பிடிப்பு நடக்கும் பொழுது அதை பார்க்கிற கிராம மக்கள் அனைவரும் கூட்டமாக வந்துள்ளார்கள்.

படப்பிடிப்பை நிறுத்திய மக்கள்

படத்தை படப்பிடிப்பை பார்க்க வந்த மக்கள் கோவிலுக்கு நன்கொடை கொடுத்துவிட்டு தான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் எனவும் படக்குழுவை வற்புறுத்தி உள்ளார்கள். இதனால் சிறிது நேரம் செட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

--Advertisement--

இதனை அறிந்த போலீசார் யாரையும் கட்டாயப்படுத்தி நன்கொடை கேட்கக் கூடாது எனவும் அவர்களாக விருப்பப்பட்டால் கொடுப்பார்கள் என கூறி மக்களை கலைத்து விட்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு கிளம்பியுள்ளது இந்தியன் டூ இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது இதில் முக்கிய நாயகர்களாக சித்தார்த் பிரியா பவானி சங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இதுபோல பல சுவாரசிய செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதளப் பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.  உங்களுக்கு இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.