காதலும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. திரை பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதே இதுக்குத்தான்.. பாகுபலி நடிகை விளாசல்..!

பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையான நோரா ஃபதேகி இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து வரலாற்று சாதனை படைத்த திரைப்படமான,

பாகுபலி திரைப்படத்தில் கவர்ச்சி கூத்தாட்டம் போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன்வசப்படுத்தி ஈர்த்தார்.

பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேகி:

இவரது நடனத்தை பார்த்து மயங்காதோர் ஒரு இளைஞர் கூட இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நளினத்தோடு இவரது நடனம் கவர்ச்சியை தூக்கலாக காட்டி கிறுகிறுக்க வைத்தார்.

இவர் 2014 ஆம் ஆண்டு ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

--Advertisement--

பாகுபலி ஐட்டம் டான்ஸ் நடிகை:

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாலிவுட்டை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கவர்ச்சி நடனமாட இவருக்கு சான்ஸ் கிடைத்துக் கொண்டே இருந்தது.

படங்களில் வெளியாகும் ஐட்டம் டான்ஸ்களில் அசால்ட்டாக நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு நோரா ஃபதேகி சமீபத்திய பேட்டி ஒன்றில்,

நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதில் காதலே இல்லை என வெளிப்படையாக கூறி இருப்பது பரபரப்பான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாகுபலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடிய நடிகை நோரா ஃபதேகி ( Nora Fatehi ) திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது திரைப்படங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார்கள்.

ஆனால், அதில் காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை வெறும் பணத்துக்காக மட்டும்தான் திரைப்படங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நட்சத்திரங்களின் காதல் பொய் காதல்:

அது மட்டுமில்லாமல் ஒரு நடிகையாக இருக்கும் பொழுது ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சனை எதுவும் வராது.

திரைத்துறையில் நடக்கக்கூடிய அனைத்து கூத்துக்களும் இருவருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் திரை துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நடிகை திருமணம் செய்தால்,

நிச்சயமாக அவர்கள் சேர்ந்து வாழ்வது என்பது கடினமான விஷயம். தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது அப்படியே சந்தேகம் வந்தாலும் அது தவிர்க்க முடியாதது என்று,

கணவருக்கு புரிய வேண்டும் என்பதால் தான் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நடிகைகள் இதற்கு காதல் என்று பெயர் வைத்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

பணத்தாசை திருமணம்:

அப்படியே திரைத்துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை திருமணம் செய்தால் அது சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தொழிலதிபராகவே இருக்கிறார்.

ஏன் நடிகைகளுக்கு சாதாரண ஒரு ஆண் மீது காதல் வரமாட்டேன் என்கிறது. திரைப்படங்களில் சாதாரண பைக் மேக்கநிக்கை கூட காதலிப்பதாக நடிக்கும் நடிகைகள்,

நிஜத்தில் நடிகர்கள் பணம் படைத்தவர்கள் என்றால் மட்டும் தான் காதல் வயப்படுகிறார்கள். என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இவருடைய கருத்துக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.