கூவத்தூருக்கு திரிஷா வரலையா..? என் மேல் வழக்கு போட சொல்லுங்க.. பிரபலத்தின் வாக்குமூலம்..!

கூவத்தூருக்கு திரிஷா வரலையா..? என் மேல் வழக்கு போட சொல்லுங்க.. பிரபலத்தின் வாக்குமூலம்..!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் திரிஷா, இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா

நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த பிறகு, பயங்கர பிஸியாகி விட்டார். தமிழில் அஜீத்குமாருக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப் படத்திலும் திரிஷா நடித்து வருகிறார்.

இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் உள்பட 3 படங்களிலும், மலையாளத்தில் 2 படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சர்ச்சை நாயகி

நகமும் சதையும் போல, பிரிக்க முடியாத விஷயமாக திரிஷாவும், சர்ச்சைகளும் இருந்துக்கொண்டே வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலையில் மதுபோதையில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது, ஆந்திராவில் பாத்ரூமில் எடுக்கப்பட்ட அவரது குளியல் வீடியோ காட்சி, லியோ படம் வெளியான போது மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் என அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் நாயகி திரிஷா, சமீபத்தில் கூவத்தூர் விவகாரத்திலும் சிக்கிக்கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசியிருப்பது, மேலும் பலத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.

வரவில்லை என்று கூறவில்லை

இதுகுறித்து பேசிய அவர், கூவத்தூருக்கு திரிஷா வந்தார் என ஏவி ராஜூ கூறுகிறார். ஏவி ராஜூவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை திரிஷா அறிக்கை விடுகிறார். ஆனால் நான் கூவத்தூருக்கு வரவில்லை என்று அவர் கூறவில்லையே?

இதையும் படியுங்கள்: விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்த நடிகர்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே…

வழக்கு போட சொல்லுங்கள்

திரிஷா மட்டுமல்ல, திரிஷா போல பல திரிஷாக்கள் கூவத்தூருக்கு வந்தது உண்மை. இது பொய் என்றால் என் மீது வழக்கு போட சொல்லுங்கள் என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மாங்கனி நகரம் சேலம் மாநகரில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பெயரை கெடுக்கும் விதமாக இந்த தகவல்களை கூறியிருக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜு என்பவர் கூவத்தூரில் தங்கி இருந்த பொழுது, வெங்கடாஜலம் திரிஷா தான் வேணும் என அடம் பிடித்தார்.

25 லட்சம் ரூபாய் கொடுத்து திரிஷாவை அழைத்து வந்தார்கள் என்று பேசியிருந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தமிழா தமிழா பாண்டியன்

நாடு முழுக்க இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பிய நிலையில் நடிகை திரிஷா, ஏவி ராஜுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன் பிறகு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஏவி ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் திரிஷா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இதனை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழா தமிழா பாண்டியன் பேசி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை மீண்டும் கிளப்பி விட்டிருக்கிறது.

கூவத்தூருக்கு திரிஷா வரலையா.. வந்தது உண்மைதான். இல்லை என்றால் என் மேல் வழக்கு போட சொல்லுங்க.. என்று அவர் வாக்குமூலம் தந்து பேசியிருப்பது, மீண்டும் கூவத்தூர் விவகாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

   

--Advertisement--