அவங்க வாயில குத்தனும்.. தீயாய் பரவும் திரிஷாவின் வீடியோ.. என்ன காரணம்..?

அவங்க வாயில குத்தனும்.. தீயாய் பரவும் திரிஷாவின் வீடியோ.. என்ன காரணம்..?

நடிகை திரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக வலம் வருகிறார். இடையில் சினிமாவில் சில சரிவுகளை சந்தித்த அவர், இப்போது மீண்டும் பிஸியான நடிகையாகி விட்டார்.

திரிஷா

குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு அவரது இமேஜ் பெரிய அளவில் உச்சம் தொட்டு விட்டது. லியோ படத்தை அடுத்து விடாமுயற்சி, தக்லைப் படங்களிலும் தெலுங்கில் 3 படங்கள், மலையாளத்தில் 2 படங்கள் என கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

எப்போதுமே நடிகை திரிஷா என்றாலே அவருடன் சர்ச்சைகளும் நிறைய வந்து விடுகின்றன. நகமும் சதையும் போல திரிஷாவின் வாழ்க்கையில் எப்போதுமே சர்ச்சைகளுக்கு குறைவிருப்பதில்லை.

குளியல் காட்சி

பல ஆண்டுகளுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலையில் போதையில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டார், ஆந்திராவில் குளியலறையில் அவரது குளியல் காட்சி என பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சமீபத்தில் லியோ முத்தக்காட்சிக்கும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். மன்சூர் அலிகான், அவரது ஸ்டைலில் ஏதோ பேசப்போக அதிலும் திரிஷாவின் பெயர் களங்கப்பட்டதாக பெரிய சர்ச்சை எழுந்தது.

இதையும் படியுங்கள்: 2வது மனைவியாகும் நடிகை அஞ்சலி..! மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

கூவத்தூரில்…

இந்நிலையில் கூவத்தூரில் கடந்த 2017ம் ஆண்டில் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது, ரூ. 25 லட்சம் கட்டணத்தில் திரிஷா அங்கு வந்து சென்றார் என்றும் அதற்கான ஏற்பாட்டை நடிகர் கருணாஸ் செய்தார் என்றும் கிளப்பிட அது அனல் பறந்தது.

இந்த பிரச்னையில் இப்போது புதிதாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது. ஒரு சினிமா நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி பங்கேற்றார்.

திரிஷா வீட்டுக்கு போய் விடுவேன்

அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிர்சி சிவா, சென்னையில் உங்களை எங்கேனும் விட்டு விட்டால் எங்கே செல்வீர்கள், என்று கேள்வி கேட்க, சென்னையில் என்னை எங்கு கொண்டு போய் விட்டாலும், நான் சரியாக திரிஷா வீட்டுக்கு போய்விடுவேன் என்று கூறினார்.

இது பயங்கரமான ஆச்சரியத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

தெலுங்கு படங்களில் மிக பிஸியாக திரிஷா நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிஷாவுடன் ராணா நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்திட்டு இருக்க.. ரசிகர்களை பதற வைத்த CWC பவித்ரா லட்சுமி..!

நின்று போன திருமணம்

அதனால், திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் என்பவருக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தம், திருமணம் வரை செல்லாமல் முடிந்தும் போனது. இதற்கு காரணம் ராணா – திரிஷா காதல்தான் என்றும் தெரிய வந்துள்ளது.

இப்படிபட்ட சூழலில் மிர்சி சிவா கேட்ட கேள்விக்கு, திரிஷா வீட்டுக்கு போய் விடுவேன் என ராணா சொன்ன பதில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்த சமூக வலைதளங்களில் திரிஷாவை மீண்டும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் மனம் வெறுத்துப் போய் இப்படி சமூக வலைதளங்களில் இழிவாக, தரக்குறைவாக பேசுபவர்களை முகத்தில் குத்த வேண்டும் என திரிஷா, வீடியோ வெளியிட்டு தன் கோபத்தை காட்டியிருக்கிறார்.

அந்த வீடியோவில் திரிஷா பேசியிருப்பதாவது, மத்தவங்களை தரக்குறைவா பேசறவங்க, விமர்சனம் பண்றவங்க அதுக்கு சோஷியல் மீடியாவை யூஸ் பண்ணீட்டு இருக்காங்க.

ஒண்ணும் செய்ய முடியாது

இப்படி எல்லாம் பண்றதால்தான் அவங்க ரொம்ப கம்பர்டபிள்டாக இருக்காங்க. யாராலேயும் அவர்களை ஒண்ணும் செய்ய முடியாதுங்கற தைரியத்துலதான் அவங்க இப்படி பண்றாங்க. இதனால அவங்க வாயிலேயே போயி யாரும் குத்து விடறது இல்லே என்று அவர் கோபமாக இந்த பதிவை செய்திருக்கிறார்.

வாயில குத்தணும்

சமூக வலைதளங்களில் தரக்குறைவாக பேசற அவங்க வாயில குத்தனும் என்று திரிஷா பேசிய அந்த வீடியோ தீயாக பரவி வருகிறது.

   

--Advertisement--