Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜெயிக்க போவது யாரு? சமந்தா – த்ரிஷா இருவரில் மணிமகுடம் யாருக்கு?

சாகுந்தலையாக சமந்தாவும், குந்தவையாக த்ரிஷாவும் வண்ணத்திரையில் மோதுகின்றனர். இதில், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு மணிமகுடம் சூட்டப்போவது யார் என்பதற்கு விடை, வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில், த்ரிஷா குந்தவையாக நடித்திருக்கிறார். இந்த படம், வரும் ஏப்ரல், 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

முதல் பாகத்தை விட, த்ரிஷாவுக்கு, அதாவது குந்தவைக்கு கதையின்படி அதிக முக்கியத்துவம் தர வாய்ப்புள்ளது. முதல் பாகத்திலும், த்ரிஷா அழகிலும், நடிப்பிலும் ஜொலித்திருந்தார் என்பதை மறுக்க முடியாது.

அதே போல், சமந்தா நடித்த சாகுந்தலம் என்ற சரித்திர படம், வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் சாகுந்தலை  கேரக்டரில் அரசியாக நடித்திருக்கிறார் சமந்தா. தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள மீண்டு வந்துள்ளதால், இந்த படத்தை, சமந்தா ரசிகர்கள் ஆர்வமாக எதிர் பார்த்திருக்கின்றனர்.

இரண்டு படங்களுமே, பான் இந்தியா படங்களாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ரசிகர்களின் மனதில் அழகிலும், நடிப்பிலும் முதலிடத்தை பிடித்து வெல்லப்போவது யார் என்பதுதான், இப்போதைக்கு சஸ்பென்ஸ் ஆக நீடிக்கிறது.

--Advertisement--

Continue Reading
 

More in

Trending Now

To Top