ஜோவிகாவின் அப்பா நான் இல்லை.. தகாத உறவில் பெற்றெடுத்தார்.. வனிதா முன்னாள் கணவர் பகீர்..!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் நடிகையர் வாழ்வில் அந்தரங்கம் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதிலும் சில நடிகர்கள், சில நடிகைகள் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வதும், கணவர்களை அடிக்கடி விவாகரத்து செய்வதும் அதிகரித்துள்ளது.

சிலர் லிவிங் டூ ரிலேசன்ஷிப் போன்ற தாலி கட்டாமல், தம்பதியராக சேர்ந்து வாழ்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சினிமா கலைஞர்கள் மீதான மரியாதை, மதிப்பு கெடுகிறது. சினிமாத்துறை என்றாலே அசிங்கம் நிறைந்தது என்ற ஒரு பார்வை ரசிகர்களுக்கு ஏற்பட இந்த ஒழுங்கீனங்கள் முக்கிய காரணமாகிறது.

வனிதா விஜயகுமார்

மூத்த நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். இவர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜயகுமார் – மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்த போதும் பெரிய அளவில் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.

அதனால் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது அவருடைய பேச்சும், நடவடிக்கைகளும் அவர் ஒரு அடாவடி பேர்வழி என்பதும், வாயாடி என்பதும் ரசிகர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது.

பிக்பாஸ் வீட்டுக்குள் அடாவடி

பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்த அடாவடியை பார்த்துவிட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, இப்போது சில படங்களில், டிவி தொடர்களில், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்

19 வயதில் முதல் திருமணம்

வனிதா விஜயகுமார், தனது 19-வது வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2007 ஆம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் 2வதாக ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்த வனிதா விஜயகுமார், 2010 ஆம் ஆண்டில் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

வனிதாவுக்கு ஒரு மகனும், இரண்டு மகன்களும் உள்ள நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் மூன்றாவதாக, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து மூன்று திருமணங்கள்

இப்படி தொடர்ந்து மூன்று திருமணங்கள் செய்து கொண்ட அவரை பற்றி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.

அதன்பின்னர் பீட்டர் பால் குடிக்கு அடிமையாக இருப்பவர். எப்போதும் போதையில் இருக்கிறார் என்று சொல்லி, அவரையும் விவாகரத்து செய்துவிட்டார் வனிதா.

பீட்டர் பால் அதிகமாக குடித்ததால், கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி, வனிதாவை விட்ட பிரிந்த சில மாதங்களில் காலமானார்.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. கீழ ஒண்ணுமே போடாமல் கடல் மேல் நிற்கும் காஜல் அகர்வால்.. வைரல் போட்டோ..!

அநீதி படத்தில்…

வனிதா இப்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சில பிசினஸ்களும் செய்து வருவதால் அதையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த அநீதி என்ற படத்தில் வனிதா வில்லியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் வனிதாவின் மகள் ஜோதிகா, பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டார். அதில் படிப்பை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி விமர்சிக்கப்பட்டார்.

நானும் இல்லை, ஆகாஷூம் இல்லை

இதுகுறித்து வனிதாவின் இரண்டாவது கணவர் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, வனிதாவுக்கும் எனக்கும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது. அந்த சமயத்தில் என் மகளுக்கு மூன்று வயது. அப்போது வனிதா குழந்தையை என்னிடமே விட்டுச் சென்று விட்டார். ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை. ஐடியில் வேலை செய்து வந்த அருண் என்பவரின் மகள்.

இதையும் படியுங்கள்: யப்பா.. கும்முன்னு இருக்கும் குமுதா.. கேமராவை தரையில் வைத்து தாறு மாறு போஸ்..!

தகாத உறவில்…

அவருடன் தகாத உறவில் இருந்துதான் குழந்தை பெற்றார் வனிதா என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார் ராஜன்.

நான்தான் அவளை பார்த்து பார்த்து வளர்த்தேன். ஆனால் பிக்பாஸில் தாய் தாய் என்று ஓவராக பாசத்தை பற்றி பேசுகிறார். நான்தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்த்தேன்.

ஒரு கட்டத்துக்கு பிறகு ஜோவிகாவை வனிதா, அவருடன் அழைத்துச் சென்றுவிட்டார். என் குழந்தையின் படிப்பை கெடுத்தது வனிதா தான் என வனிதாவின் முன்னாள் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்பா நான் இல்லை

ஜோவிகாவின் அப்பா நான் இல்லை. தகாத உறவில் பெற்றெடுத்தார் வனிதா என்று முன்னாள் கணவர் பகீர் குற்றச்சாட்டை வைத்திருப்பது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.