Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

எத்தனை பேரு கூட வேணாலும் பண்ணுவேன்… பிக்பாஸ் வனிதா ஆபாச பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..

Tamil Cinema News

எத்தனை பேரு கூட வேணாலும் பண்ணுவேன்… பிக்பாஸ் வனிதா ஆபாச பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..

தமிழ் திரை உலகில் பிரபல குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்த நடிகர் விஜயகுமார் பற்றி அதிக அளவு கூற வேண்டியது இல்லை. இவரது இரண்டாவது மனைவி மஞ்சுளா விஜயகுமாரும் ஒரு அற்புதமான நடிகை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: நான் என்ன பண்ணுவேன்.. எரிச்சலா இருக்கு.. 2ம் திருமணம் செஞ்சு ஒரு வாரத்துல.. அதிதி சங்கர் புலம்பல்..

நாட்டாமை படத்தில் நாட்டாமை ஆகவே வாழ்ந்து பல குணச்சித்திர வேடங்களில் அசத்திய இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருக்கிறார். இவரது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார்..

நடிகை வனிதா விஜயகுமாரை பற்றி அதிக அளவு கூற வேண்டாம். சினிமா பின்புலத்தைக் கொண்டு வந்தவர் என்பதால் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததை இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு டாட்டா சொல்லிவிட்டார்.

--Advertisement--

எனினும் இவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் ஆனந்தராஜ் என்பவருடன் காதல் கொண்டதை அடுத்து அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடனும் இவர் ஒன்றாக வாழவில்லை இதனை அடுத்து இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

சட்டப்படி ரெண்டு கல்யாணம்..

இந்த சூழ்நிலையில் சட்டப்படி இரண்டு திருமணங்களை மேற்கொண்ட இவர் மேலும் திருமணம் செய்து கொள்வாரா? என்ற கேள்வியை அண்மை பேட்டி ஒன்றில் நிருபர் ஒருவர் இவரிடம் கேட்க விவகாரம் வேறு விதமாக மாறியது.

 

இந்த சூழ்நிலையில் இவர் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது சட்டப்படி இரண்டு திருமணங்கள் நடந்து இரண்டுமே விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்ன அடுத்த நிமிடம் அவர் சட்டப்படி இரண்டு என்றால் இல்லீகளா எத்தனை திருமணம் என்று கேட்டதால் கொந்தளித்து போனார் வனிதா.

தேவைனா எவ்வளவு வேணாலும் பண்ணுவேன்..

இதனை அடுத்து இல்லீக்கள எத்தனை திருமணம் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம். இதை யார் கேட்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்பியதோடு தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற குண்டை போட்ட இவர் தற்போது யார் மேலேயும் கிரஷ் இல்லை என்று பதில் அளித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அது போல கிரஷ் இனி வராது என்று தெரிவித்திருக்க கூடிய இவர் அப்படி மூன்றாவது திருமணம் செய்து கொண்டாலும் கண்டிப்பாக உங்கள் எல்லோரிடம் செல்லி விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஓப்பனாக கூறியதை அடுத்து, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதாவிடம் இவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று கேட்டிருக்கும் நெட்டிசன்களுக்கு பதில் அளிக்க முடியாமல் புலம்பி வருகிறார்.

இதனை அடுத்து இவரது திறமையான பேச்சை ரசிகர்கள் பலரும் கேட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இதனை பேசும் பொருளாக மாற்றி இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top