தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய்யின் அப்பா ஒரு இயக்குனர் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆரம்ப காலத்தில் திரை உலகில் தன்னை நிலை நிறுத்த சற்று கடினமாக உழைத்த இவரது உழைப்பு வீண் போகவில்லை.
அந்த வகையில் இன்று முன்னணி கதாநாயகனாக மாறியிருக்கும் நடிகர் விஜய் இன்னும் இரண்டு ஆண்டுகளில் திரையுலகை விட்டு முற்றிலும் நீங்கி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார்.
நடிகர் விஜய்..
அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த வாரிசு, லியோ போன்ற படங்கள் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றவாறு இருந்தது என்று முழுமையாக சொல்ல முடியாது.
இதனை அடுத்து பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்கள் இந்த இரண்டு படங்களை பற்றியும் அவரது நடிப்பு பற்றியும் எழுந்தது.
இதையும் படிங்க: சினிமாவின் சாபக்கேடு.. வெள்ளிக்கிழமை ராமசாமி.. ஜீவி பிரகாஷை கிழித்த பிரபலம்..!
---- Advertisement ----
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய விதமாக தற்போது இவர் நடித்து வரும் கோட் திரைப்படம் இருக்கும் என்று நம்பலாம். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இந்த படம் முடிந்த கையோடு தளபதி 69-இல் நடிக்க இருக்கும் தளபதி விஜய் இந்த படத்தோடு சினிமாவிற்கு பை,பை சொல்லி விடுவார்.
![](data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%20600%20400'%3E%3C/svg%3E)
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து இருக்கக் கூடிய நடிகர் விஜய் நேற்று சாய்பாபா கோவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த புகைப்படம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமா? என்று பல கேள்விகள் எழுப்பிய நிலையில் அது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாது.
நடிகர் விஜய் தனது தாய் சோபாவுக்காக தனது சொந்தமான நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்பாபா கோயில் கட்டி இருக்கிறார்.
பெற்ற தாய்க்காக விஜய் செய்த விஷயம்..
இந்த கோயில் ஆனது கொரட்டூரில் உள்ள தனது சொந்த நிலத்தில் அம்மாவுக்காக விஜய் கட்டியது. இந்த சாய்பாபா கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது.
அந்த சமயத்தில் தான் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!
அத்தோடு நடிகர் விஜய் கட்டி இருக்கக்கூடிய கொரட்டூர் ஸ்ரீ சாய்பாபா மஞ்சள் கோவிலின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த காலத்தில் அம்மாவுக்காக கோயிலை கட்டி தந்துள்ள தளபதி விஜய் பற்றி அனைவரும் வெகுவாக பாராட்டி பேசி இருப்பதோடு இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதனை அடுத்து தளபதி விஜய் தனது அம்மாவின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அம்மாவுக்காக தளபதி ஒரு பிரம்மாண்டமான கோயிலை கட்டி இருப்பதால் நிச்சயம் இவர் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெறுவார் என்று பெரியவர்கள் பேசி வருகிறார்கள்.