Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

“திருமணதிற்கு முன்பே பெண்கள் கன்னித்தன்மை இழப்பது..” யாஷிகா ஆனந்தை விளாசும் ரசிகர்கள்..!

சினிமா நடிகைகள் என்றாலே ஏதேனும் சர்ச்சையான கருத்துகளை பேசுவது என்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.

அதுவும் மற்றவர் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இதுபோன்று சர்ச்சையான விஷயங்களை பேசுவதால் ரசிகர் மத்தியில் நமக்கான கவனம் அதிகரிக்கும் என்பதாலேயே இவர்கள் இது போன்ற விஷயங்களை தேர்வு செய்து பேசுகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

அந்தரங்க விஷயங்கள்

ஏனெனில் கற்பு, ஒழுக்கம், அந்தரங்க விஷயங்களை இவர்கள் அடிக்கடி பொதுவெளிகளில் பேசி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக நடிகை குஷ்பு ஒருமுறை கற்பு குறித்து பேசி பயங்கரமாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

அதாவது பெண்களுக்கு கற்பு என்பது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்பது போல் அவர் கருத்து தெரிவித்திருந்தது, பெரும்பாலான மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் நடிகை சுகாசினியும் கற்பு குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டு, அவரும் பொதுமக்களின் பலத்த கோபத்துக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

யோசித்து பேசுவது…

சினிமா நடிகைகள் என்பவர்கள் சமுதாய கருத்துக்களை சொல்லும்போது மக்களுக்கு அது பயன்படக்கூடிய விஷயமாக இருக்கிறதா என்பதை யோசித்து பேசுவது மிகவும் முக்கியம்.

குறிப்பாக நடிகர்கள் கூட இது மாதிரியான அந்தரங்க விஷயங்களை தொடுவதில்லை. அவர்கள் பொதுவான விஷயங்களை, நாட்டு நடப்புகளை தங்கள் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை, போராட்டங்களை தான் பேசுகிறார்களே தவிர இதுபோன்ற அந்தரங்கமான விஷயங்களை எந்த நடிகருமே பேசுவதில்லை, அவர்கள் அதை விரும்புவதும் இல்லை.

வாய்க்கு வந்த…

ஆனால் சில நடிகைகள் குறிப்பாக இளம் நடிகைகள் இப்படி வாய்க்கு வந்த விஷயங்களை எல்லாம் பேசி, அடிக்கடி சர்ச்சைகளில் சிகிக் கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது.

யாஷிகா ஆனந்த்

இப்போது நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து, கவலை வேண்டாம் உள்ளிட்ட சில படங்களில் தான் நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் பெரிய அளவில் ரீச் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான்.

இந்நிலையில் கற்பு குறித்து பேசி இப்போது சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

கன்னித்தன்மை இழப்பது…

திருமணதிற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மை இழப்பது குறித்த கேள்விக்கு நடிகை யாஷிகா ஆனந்த் இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு ஆண்கள் கன்னித்தன்மை இழப்பது தவறில்லை என்றால், அதே போல பெண்களும் கன்னித்தன்மை இழப்பதில் தவறு எதுவும் இல்லை என பதில் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவரை சகட்டு மேனிக்கு விளாசி வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top