“13 வயசுலயே அது நடந்துடுச்சு..” யாஷிகா ஆனந்த் கூறிய பகீர் தகவல்…!

தற்போது தனது முரட்டுக் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பல விதங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வதோடு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போடுகிறார்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த் ஆரம்ப நாட்களில் மாடலிங்கில் கலக்கி வந்தார். இதனை அடுத்து “கவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் தமிழில் மிகச் சிறந்த காமெடியின் நடிகராக இருந்த சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

சமூக வலைத்தளங்களில் அத்துமீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அடுத்து இவருக்கு ஒரு தனி ரசிகர் படையே உள்ளது என கூறலாம். திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த இவர் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தப் படத்தில் அதிகமாக பேசப்பட்ட இரட்டை அர்த்த வசனம், விவகாரமான கதை அம்சம் ரசிகர்களின் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குட்டி உடைகளை போட்டு பிக் பாஸ் வீட்டை கிளு கிளுப்பாக வைத்துக் கொண்டார்.

எனினும் இவர் இறுதி வரை பிக் பாஸ் வீட்டில் விளையாடாமல் இடையிலேயே நிகழ்ச்சிகள் இருந்து வெளியேறியது பலர் மனதையும் பாதித்தது. தனக்கு ஏற்பட்ட கார் விபத்தை அடுத்து திரைப்படங்களில் கிடைக்கும் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் யாஷிகா ஆனந்த் மற்றும் ரிச்சர்ட் நடிப்பில் வெளி வந்த “சில நொடிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது அவர் தான் ஒரு அஜித் ரசிகை என்று கூறியிருக்கிறார். இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம் போன்ற படங்கள் உள்ளது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் யாஷிகா ஆனந்த் 13 வயதில் தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசி இருக்கிறார். பொது இடத்தில் தனக்கு கொடுமை நடந்ததை குறித்து Youtube சேனல் ஒன்றில் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் இவர் நடிகர் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்ததாகவும் அதற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து கொண்டிருந்த போது யார் என்று முகம் தெரியாத நபர் ஒருவர் தவறான இடத்தில் தன்னை தொட்டதாக கூறினார்.

அத்தோடு அந்த நபரை நான் திரும்பிப் பார்த்து எட்டி உதைத்தேன். அவன் அப்படியே விழுந்துவிட்டான். அந்த வயதில் அது எனக்கு குட் டச் அல்லது பேடு டச் என்று கூட தெரியாது என்று கூறியதோடு தைரியமாக இருந்ததால் தான் 13 வயதில் அவனை நான் அடித்து கீழே தள்ளினேன் எனவே பெண்களுக்கு தைரியம் மிகவும் முக்கியம் எனக் கூறியிருக்கிறார்.