Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

மார்பு வலிக்குது சொன்ன பெண்.. அதோடு விட்ட யோகி பாபு.. அவரே கூறிய தகவல்..!

தமிழ் திரையில் எண்ணற்ற காமெடி நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி சென்று இருக்கிறார்கள். அந்தவரிசையில் கவுண்டமணி, செந்தில் வடிவேலுக்குப் பிறகு தற்போது காமெடியில் அசத்தி வரும் யோகி பாபு பற்றி அதிக அளவு பிளாஷ்பேக் தேவையில்லை.


நடிகர் வடிவேலு போலவே இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே பலரும் சிரித்து விடுவார்கள். மேலும் குண சித்திர நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய யோகி பாபு தற்போது கோலிவுட் முன்னணி நடிகர்களின் வரிசையில் ஒருவராக மாறி வருகிறார்.

மார்பு வலிக்குதுன்னு சொன்ன பெண்..

ஆரம்ப நாட்களில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபாவில் தலைகாட்டிய பிறகு சினிமாவிற்குள் நுழைந்து காமெடி நடிகராகவும், ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

இதை அடுத்து யோகி பாபு பற்றி ஒரு சில விஷயங்கள் இணையதளங்களில் வெளி வந்து ட்ரெண்டிங் ஆன மேட்டராக மாறிவிட்டது. யாமிருக்க பயமேன் எனும் திரைப்படத்தில் இவரது கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனை அடுத்து இவரை பலரும் உருவ கேலி செய்திருக்கிறார்கள்.


எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் டைமிங் இல் ரைமிங்கில் பேசி அனைவரையும் அசத்தக்கூடியவர்.

--Advertisement--

தமிழ் சினிமாவை பொருத்த வரை காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறக்கூடிய பல நடிகர்களை சொல்லலாம் உதாரணமாக கவுண்டமணி, விவேக வடிவேலு. அந்த வகையில் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து இருக்கிறார்.

அத்தோடு விட்ட யோகி பாபு..

இவர் நடிப்பில் வெளி வந்த கூர்கா திரைப்படம் போதிய அளவு வெற்றியை தராவிட்டாலும் மாவீரன், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்க கூடிய இவர் மாவீரன் படத்தில் அனைவரையும் சிரிக்க வைக்க கூடிய வகையில் நடித்திருந்தார்.

தற்போது யோகி பாபு பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக அனைவரது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் மேடையில் பேசியவர் ஒரு படத்தின் பாடல் காட்சியில் நான் நடனம் ஆடினேன்.


இரவு நேரத்தில் நடந்த இந்த ஷூட்டில் நான் சரியாக ஆடவில்லை. அப்போது எனக்கு பின்னிருந்து ஆடிய ஒரு லேடி எனக்கு மார்பே வலிக்குது இவன் சரியா ஆடி தொலைக்க மாட்டேங்கிறானே என்று புலம்பினார்.

அவரே சொன்ன உண்மை..

இதனை அடுத்து இனி மேல் நாம் யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து நடனம் ஆடுவதை தவிர்த்து விட்டதாக கூறியிருக்கிறார். இப்படி தனக்கு நடனமாட வரவில்லை என்பதை ரசிகர்களின் மத்தியில் ஓப்பனாக சொன்ன நல்ல மனிதன் என்று இவரை பலரும் சொல்லி வருகிறார்கள்.


மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் இந்த விஷயத்தை அறிந்து கொண்டு யோகி பாபுவின் நேர்மையான உள்ளத்தைப் பற்றி பாராட்டி பேசி வருகிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top