“உங்க வீட்டு கட்டில்-க்கு கீழ இதெல்லாம் இருக்கா..!” – செலவு குறைய இதையெல்லாம் மாத்துங்க..!!

வாஸ்து சாஸ்திரம் இன்று பலராலும் பெரும் அளவு பார்க்கப்பட்டு அதற்கு ஏற்றபடியே வீடுகளில் இருந்து மற்ற தொழில் ஸ்தாபனங்கள் வரை வடிவமைக்கப்படுகிறது. எனவே தற்போது வாஸ்து சாஸ்திரத்தில் அதீத நம்பிக்கையும் விழிப்புணர்வும் மக்களிடையே பெருகி உள்ளது.

வீட்டுக்கு வீடு வாசப்படி எப்படி உள்ளதோ அது போலவே பிரச்சனைகளும் நிலவு வருகிறது. அந்த  பிரச்சனைகளை தடுக்க உதவக்கூடிய இந்த வாஸ்துவை நாம் பின்பற்றுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். அந்த வகையில் உங்கள் வீட்டு கட்டில் இருக்கும்.

 அந்த கட்டிலுக்கு கீழே  காலியாக இடம் இருப்பதால் பல பொருட்களை அடியில் வைத்தீர்கள். அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய இந்த பொருட்களை அடியில் வைத்தால் நீங்கள் சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்று உங்களுக்கு தெரியாது அந்த அளவு பணப்புழக்கத்தில் தட்டுப்பாடை ஏற்படுத்தித் தரும். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டைகளை ஏற்படுத்திவிடும்  பொருட்கள் என்னென்ன என்று தெரியுமா?

கட்டிலுக்கு கீழ் வைக்க கூடாத பொருட்கள்

👍நீங்கள் பெருக்கி முடிந்த பின்பு அந்த துடைப்பத்தை நீங்கள் அப்படியே நிறுத்துவதற்கு சங்கடப்பட்டு கட்டிருக்கு அடியில் போட்டு விட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.

👍ஆனால் கட்டிலுக்கு அடியில் கிடைக்கும் இந்த தொடப்பத்தால் உங்களுக்கு எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வீடுகளில் பண பிரச்சனையை ஏற்படுத்துவதோடு நோய் நொடி தாக்குதல்களுக்கும் இது வழிவகுக்கம்.

👍மேலும் கணவன் மனைவி இடையே பிரச்சனைகளை தூண்டி விடக் கூடிய துடைப்பத்தை நீங்கள் உங்கள் கட்டிலுக்கு அடியில் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்.

👍 இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நீங்கள் உங்கள் கட்டிலுக்கு அடியில் போட்டு வைத்திருந்தால் அது வீட்டில் தோஷத்தை ஏற்படுத்தி பண பிரச்சனையை அதிகரிக்கும்.எனவே இரும்பு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தாலும் அதை உடனே அப்புறப்படுத்தி விடவும்.

👍இன்று நாகரீகம் பெருத்து விட்டதின் காரணமாக வீடுகளிலும் செருப்பினை போட்டு நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களுடைய செருப்பை தலை வைக்கும் பகுதியில் அதாவது கட்டிலில் நீங்கள் தலை வைத்து படுக்கக் கூடிய பகுதிக்கு நேராக விடுவதின் மூலம் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து உங்களுக்கு பல எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே அது போல செய்யாதீர்கள்.

👍 முகம் பார்க்கும் கண்ணாடியை வாஸ்து சாஸ்திரத்தின்படி தலைக்குப் பின்புறம் அல்லது அடியில் வைப்பது தவறு இது கணவன் மனைவிக்கு இடையே சண்டைகளை மூட்டி விடும் என்பதால் கண்ணாடியை அது போல வைக்க வேண்டாம்.

👍 எலக்ட்ரானிக் பொருட்களை படுக்கை அருகில் வைப்பது மிகவும் தவறு. இதன் மூலம் ஒருவருது மனநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்டு எந்த விதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் உங்கள் படுக்கை அறைக்குள் கொண்டு செல்வதை தவிர்த்து விடுங்கள்.

   

--Advertisement--