நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்துள்ளார்.
இளம் கதாநாயகர்கள் விரும்பும் நடிகையாக மாறி வருகிறார்.
தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நன்றாக உள்ளது. எனவே இரு மொழிகளில் தயராகும் படங்கள் அவருக்கு குவிகின்றன. இவர் தன்னுடைய முதல் காதல் பற்றி கூறியுள்ளார். ‘
எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் கிரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான்.கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் என்றால் அது அஜித் சார் தான். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ராஷி கண்ணா.
பட வாய்புகள் இவரை தேடி வருவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் சக நடிகர்களுடன் மரியாதையாகவும் அதே நேரம் எந்தவித டிமாண்டும் இல்லாமல் சொல்வதை மட்டும் கேட்டு நடக்கும் சமத்து பிள்ளையாக இருப்பது தான்.
இந்நிலையில், சமீபத்தில், கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த புகைப்படங்கள இதோ,





