கடந்த 2012-ல் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.
அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார்.
பிறகு அஜித்தின் வீரம் திரைப்படத்திலும், விஜயின் ஜில்லா திரைப்படத்திலும் நடித்தார்.மேலும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வித்யுலேகா.
வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.இதுவரை காமெடி கதாபதிரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வித்யுலேகாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் படி உள்ளன.
கவர்ச்சி அவதாரமெடுத்துள்ள இவர் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
\







