அபிராமி குறித்து பிக்பாஸ் முகெனின் முறைப்பெண் விளாசல்..! - என்ன இப்படி சொல்லிடாரு..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட பதினாறு போட்டியாளர்களில் ஒருவர் தான் மலேசியாவை சேர்ந்த யூ-ட்யூப் பாடகர் முகென். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இவர் தற்போது சக போட்டியாளர் அபிராமியுடன் நெருங்கி பழகி வருகிறார். 

இந்நிலையில் முகெனின் இந்த செயல் தனக்கு கஷ்டமாக உள்ளதென அவரது முறைப்பெண் துர்கா என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், நானும் முகெனும் உறவினர்கள். 


இன்னும் சொல்லப்போனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசி வைத்துள்ளோம். முகெனுடன் அபிராமி பழகுவது எனக்கு சற்று கஷ்டமாக தான் இருக்கிறது. அதே வேளையில் தனக்காக ஒருவர் வெளியில் காத்திருக்கிறார் என சொல்லி உள்ளார் முகேன். ஆனாலும், தொடர்ந்து முகெனுடன் அபிராமி நெருங்கி பழகி வருகிறார்.


ஆனால் ஏன் அவர் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை. ஏனெனில் முகென் குறிப்பிட்ட அந்த பெண் நதியா எங்களுக்கும் பழக்கமானவர். எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முகென் என் தம்பி போன்று என தெரிவித்து இருந்தார். 

ஆனால் ஏன் இப்படி அந்த பெண்ணின் பெயரை முகென் குறிப்பிட்டார் என தெரியவில்லை. அவராகவே வெளியே வந்த உடன் அதை பற்றி பேசட்டும் என தெரிவித்து உள்ளார் முறைப்பெண்ணான துர்கா.
Previous Post Next Post
--Advertisement--