கவின், சாக்ஷி, லாஸ்லியா, முகென், அபிராமி ஆகியோருக்கு இரவெல்லாம் இது தான் வேலை..! - பிக்பாஸ் ரேஷ்மா


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிதாக எந்த கெட்ட பெயரும் எடுக்காமல் கடந்த வாரம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் புன்னகையோடு வீட்டில் இருந்து வெளியேறியவர் நடிகை ரேஷ்மா. 

அவரை வெறுத்தவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் பேட்டிகள் கொடுப்பது வழக்கம். அதேபோல் ரேஷ்மாவும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். 


அதில், அவர் கூறியதாவது, நானும் மதுமிதாவும் சமைப்பதால் எப்போது லைட் ஆப் செய்வார்கள் என்று காத்திருப்போம். மற்றபடி கவின், சாக்ஷி, லாஸ்லியா, முகேன், தர்ஷன், அபிராமி ஆகியோர் எப்போடா லைட் ஆஃப் பண்ணுவாங்க என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 


லைட் ஆஃப் பண்ணியதும் விடிய விடிய பேசிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் சிரித்து பேசுவது எங்களுக்கு நன்றாக கேட்கும். ஆனால், ஒரு கட்டத்தில் நான் தூங்கி விடுவேன். இரவு முழுவதும் பேசி விட்டு பிறகு பகலில் தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இது தான் அவர்களுக்கு வேலை என்று கூறியுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--