இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இறுதியில் இப்படியொரு ட்விஸ்ட் இருக்கும் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நடந்து விட்டது.
ஆம், நடிகர் சரவணனை வீட்டை விட்டு வெளியேறுமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். காரணம், அவர் கல்லூரி காலத்தில் பேருந்தில் செல்லும் போது பெண்களை உரசுவதற்க்காகவே பேருந்தில் செல்வேன் என்று கூறியது தான்.
இதற்காக, அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இளம் தலைமுறையினர் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று வேதனையும் தெரிவித்தார். ஒரு வாரம் கடந்த நிலையில், இன்று சரவணனை வெளியேறுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டார் பிக்பாஸ்.
இதனை பார்த்த ரசிகர்கள், இது நிச்சயம் ஜீரணிக்க முடியாத ஒன்று. அவர் தொலைகாட்சியிலேயே மன்னிப்பு கேட்ட பிறகும் இப்படி செய்திருப்பது தேவையற்றது. இந்த வார இறுதியில் எலிமினேட் செய்து கூட அனுப்பியிருக்கலாம் என கூறி வருகிறார்கள்.