தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்போது குஷியாக இருக்கிறார். இதன் காரணம் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து 50 நாட்கள் ஆகிவிட்டது. பாதி கிணறை தாண்டி விட்ட அவர்கள் அடுத்த கிணற்றை தாண்டும் முயற்சியில் இருக்கிறார்கள்.
அண்மையில் இந்த வீட்டில் 17 வது போட்டியாளராக ஒய்ல்டு கார்டு மூலம் உள்ளே சென்றவர் நடிகை கஸ்தூரி. அவர் அங்கு சென்றதுமே நிகழ்ச்சி சற்று சூடுபிடித்தது எனலாம்.
இதில் கஸ்தூரியை உங்கள் ஹீரோவை தேர்ந்தெடுக்கலாம் என கமல் கூற அவர் ஷெரின், தர்ஷன் காதல் சித்தரிப்பை கூறி இருவரையும் மாலை மாற்ற வைத்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1 பிரபலம் காஜல் பசுபதி கஸ்தூரி ஷெரினுக்கு தவறாக நம்பிக்கை கொடுத்துவிட்டார். தர்ஷனின் தோழி இதனால் வெறுப்படைவார் என கூறியுள்ளார்.