"தளபதிக்கு இந்த டைட்டில் மிஸ் ஆகிடுச்சே வருத்தத்தில் இருக்கோம் - நீங்க என்னடானா இப்படி பண்ணிட்டீங்க " - ரசிகர்கள் வருத்தம்


நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் குறித்து புதிதாக சொல்லி தெரிய வேண்டியதில்லை. விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் அறிவிப்பில் இருந்து, ஃபர்ஸ்ட்லுக், டீசர், ட்ரெய்லர், பாடல்கள் தொடங்கி படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் வரை தாறுமாறாக கொண்டாடுவார்கள். 

இதில் முக்கிய பங்கு வகிப்பதில் ஒன்று படத்தின் தலைப்பு. விஜய் படங்களின் தலைப்பு அதிக பட்சம் ஐந்து எழுத்துகளுக்குள் இருப்பது போல பார்த்துக்கொள்வது விஜய்யின் இயல்பு. பெரும்பாலான படங்கள் உச்சரிப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில் தான் இருக்கும். 


அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான "சர்கார்" திரைப்படத்திற்கு முதலில் "மாநாடு" என்ற தலைப்பு தான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தவர் அந்த தலைப்பை தர மறுத்தால் படத்திற்கு "சர்கார்" என்ற தலைப்பை வைத்து விட்டனர். 


ஆனால், நடிகர் சிம்பு - வெங்கட்பிரபு கூட்டணியில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருந்த படத்திற்கு "மாநாடு" தலைப்பை எப்படியோ பெற்றுவிட்டனர். ஆனால், நடிகர் சிம்பு செய்த பிரச்சனை காரணமாக படத்தை தட்ராப் செய்து விட்டார் சுரேஷ் காமாட்சி. 

இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் "தளபதிக்கு இந்த டைட்டில் மிஸ் ஆகிடுச்சே-னு வருத்தத்தில் இருக்கோம். ஆனால், நீங்க என்னடானா இப்படி பண்ணிட்டீங்க..?" என்று சிம்புவை திட்டி வருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--