பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே காதல் பிரச்னையில் சிக்கித் தவித்தது. அதில் முக்கிய நபராக கருதப்பட்ட நடிகை சாக்ஷி அகர்வால் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து கஸ்தூரி வைல்ட் கார்ட் என் ட்ரியாக போட்டிக்குள் வந்தார். அவரைத்தொடர்ந்து வாடி ராசாத்தி என்ற பில்டப்புடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்தார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், ஏன் மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்ற உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஹலோ டாஸ்க்கின் போது மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் நடிகை வனிதா விஜயகுமார் வார இறுதியில் மக்களின் ஓட்டைப் பெற இப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும், பெரும்பாலான போட்டியாளர்கள் தனக்கு எதிராக திரும்பியதால் தான் கூறிய கருத்தை நிரூபிக்க அவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால வெறுப்பின் உச்சிக்கே சென்ற மதுமிதா தனது கையை கத்தியால் கீறிக்கொண்டிருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியான பிக்பாஸ் குழு மதுமிதாவிற்கு உடனடியாக மருத்துவ உதவி அளித்து அவரை வெளியே அனுப்பி விட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நடிகரும், பிரபல அரசியல் கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர் "மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா..? ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை." என்று கூறியுள்ளார்.
#BiggBossTamil #TNDGP #TNCMO மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா⁉️ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) August 18, 2019