டாப் ஸ்டார் "பிரசாந்த்" அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தெரியுமா..? - மாஸ் அப்டேட்.!


ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வளம் வந்து ஐஸ்வர்யா ராய் உடன் டூயட் பாடிய பிரஷாந்த் மீது யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இடையில் சிறிது காலம் காணாமல் போனார். 

1990-ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்புகள் குவிந்தன. 1992-ம் ஆண்டு மட்டும் ஆறு படங்கள் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து, வருடதிற்கு மூன்று படம், நான்கு பாடம் என்று ரிலீஸ் செய்து வந்த இவருக்கு 2000 வருடத்திற்கு பிறகு படிப்படியாக படங்கள் குறைந்தது. 

2000 முதல் 2010 வரை வருடதிற்கு ஒரு படம் கொடுத்து வந்த  இவர் 2010 முதல் 2015 வரை லீவு எடுத்துக்கொண்டார். சோலி முடிஞ்சது. பிறகு, மம்பட்டியான் வாழ்கை வரலாறு படத்தில் நடித்தார். படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், கிட்ட தட்ட 40 நிமிட காட்சிகளை சென்சார் போர்டு வெட்டி வீசியது. 


இதனால் படம் படுத்துவிட்டது. தொடர்ந்து, படங்களில் நடித்து வரும் இவருக்கு இப்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.


ஆம், பாலிவுட்டில் வெளியான 'அந்தாதுன்' திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் வெறும் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தின் பிற மொழி ரீமேக் உரிமை மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்று தீர்ந்தன. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், தற்போது வந்துள்ள நம்பதகுந்த தகவலின் படி டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாக கூறுகிறார்கள். 

.
Previous Post Next Post
--Advertisement--