பிரியாணி ஐஸ்கிரீம்.. காதலியின் விசித்திர உடலுறவு ஆசை.. கஷ்டப்பட்டு செய்த காதலன்.. துடிதுடித்து பிரிந்த உயிர்..

தாவணகெரேயில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளியின் நிறுவனரும் ஆசிரியருமான பிரவீன் பசப்பா, தன் ஆறு வயது மகளின் சந்தேகத்திற்குரிய மரணத்தைத் தொடர்ந்து, அவரது மனைவி பிரியங்கா மற்றும் அவரது நண்பர் மோகன் ஜி. மகாலிங்கப்பா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூரு காவல்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த மார்ச் 24ஆம் தேதி இரவு, பிரியங்காவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த சம்பவம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பிரியங்கா தன் நண்பர் மோகனுடன் ஒரு காபி கடைக்குச் சென்றபோது, குழந்தைக்கு பிரியாணியும் ஐஸ்கிரீமும் கொடுத்துவிட்டு, ஏர் கண்டிஷனர் இயக்கப்பட்ட காரில் தூங்க வைத்துவிட்டுச் சென்றதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.

பின்னர் வீடு திரும்பியதும், உறங்கிக் கொண்டிருந்த மகளைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.மறுநாள் காலை, குழந்தை எழுந்திருக்கவில்லை என்று தெரிவித்த பிரியங்கா, உடனடியாக வைட்ஃபீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆரம்பத்தில் உணவு சம்பந்தப்பட்ட பிரச்னை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெளிவான முடிவு இல்லாததாலும், பிரியங்காவின் வாக்குமூலத்தில் சில முரண்பாடுகள் இருந்ததாலும், காவல்துறை குழந்தையின் உள்ளுறுப்பு மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியது.

இதனிடையே, சம்பவம் நடந்த உடனேயே மோகன் முன்ஜாமீன் கோரியது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. குழந்தையின் தந்தை பிரவீன், தன் மகள் மீது உடல் ரீதியான தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று குற்றம் சாட்டினார். 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு குழந்தைக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை அறிக்கையை இங்கிலாந்தில் உள்ள தன் சகோதரியிடம் (குழந்தைகள் நல மருத்துவர்) அனுப்பியதாகவும், அதில் சில சந்தேகங்கள் எழுந்ததாகவும் பிரவீன் கூறியுள்ளார்.

பிரவீன் மற்றும் பிரியங்கா இடையேயான 17 வருட திருமண வாழ்க்கை கடந்த 2025ஆம் ஆண்டு பிரியங்கா பெங்களூரு சென்ற பிறகு மாற்றம் அடைந்தது. அங்கே தன் கல்லூரி நண்பரான ரியல் எஸ்டேட் அதிபர் மோகனுடன் மீண்டும் தொடர்பு கொண்ட அவர் அவருடைய வீட்டில் அவருடன் ஜன்னல்களை மூடாமல் விசித்திரமான முறையில் உடலுறவில் இருந்த போது கணவரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். கணவர் இருக்கும் போது இன்னொரு நபருடன் உடலுறவில் இருந்த பிரியாங்காவை வெறுத்தார் பிரவீன். கூறப்படுகிறது.

2025 டிசம்பரில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு துபாய் சென்றதாகவும் பிரவீன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்குப் பிறகு மூத்த மகள் தந்தை பிரவீனுடன் தங்க, இளைய மகள் தாய் பிரியங்கா மற்றும் மோகனுடன் வாடகை வில்லாவில் வசித்து வந்தாள்.

தற்போது மோகன் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் உள்ளார். பிரியங்கா எங்கே இருக்கிறார் என்று தொடர்புகொள்ள முடியவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வரும் காவல்துறை, குழந்தை காரில் இறந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்கள் இருந்ததா? என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று காவல் துணை ஆணையர் சைதுலு அடாவத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை குழந்தையின் குடும்பத்தினரும், உறவினர்களும் காத்திருக்கின்றனர்.

Summary in English : In Bengaluru, a 6-year-old girl's suspicious death has led to a case against her mother Priyanka, a lawyer, and her friend Mohan G. Mahalingappa, a real estate businessman.

The child's father Praveen alleged foul play after inconsistencies in statements and postmortem findings. Police are investigating whether the child was left in the car or other factors contributed, with Mohan in custody.