தன்னை "ஐட்டம்" என கூறிய வாலிபருக்கு திருமணமான பெண் கொடுத்த தண்டனை - மற்ற பெண்களுக்கு உதாரணம்..!


மும்பை சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர் விமான பெண் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்ததும் அவரது தோழியுடன் கிளம்பியுள்ளார். 


அவரது தோழி அவரை ராஜேந்திர பிரசாத் நகர் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு சென்று விட்டார். அந்த இடத்தில் சிறிது நேரம் பேருந்திற்காக காத்திருந்தார் அந்த பெண். அப்போது, அந்த வழியாக வந்த போதை வாலிபர் ஒருவர் அவரை தகாத வார்த்தைகளில் வருணித்ததுடன் ஐட்டம் என்றும் கூறியுள்ளார். 

இதனால், கடும் மன உழைச்சலுக்கு உள்ளானார் அந்த பெண். ஆனால், அந்த பிரச்சனையை அவர் கையாண்ட விதம் பாராட்டுக்களை பெற்றதுடன் சக பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும் அமைத்துள்ளது. தன்னை ஐட்டம் என்று கூறி விட்டு சென்று அந்த வாலிபரை அவர் பின் தொடர்ந்து சென்று அவனது வீட்டை கண்டுபிடித்தார். 


அங்கிருந்த படி தனது உறவினர்களுக்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு நடந்ததை விரிவாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியான உறவினர்கள் உடனடியாக அவர் கூறிய விலாசத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து, போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. 

உடனடியாக அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அந்த போதை ஆசாமி தினேஷ் யாதவை அலேக்காக அள்ளிச்சென்றனர். அவன் மீது, பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டது, பெண்ணை இழுவு படுத்தி பேசியது என 305(A) மற்றும் 509 என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், இப்படியான பிரச்சனைகளை எப்படி கையாள வேண்டும் என சக பெண்களுக்கு ஒரு உதாரணமாக அமைத்துள்ளது. 

#வாழ்த்துக்கள்_சகோதரி
Previous Post Next Post
--Advertisement--