விஜய் சொன்ன அந்த குட்டி கதை அட்டர் காப்பியா..? - வைரலாகும் வீடியோ - விஜய் ரசிகர்கள் பதிலடி


தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குட்டிக்கதை ஒன்று சொன்னார். பூக்கடையில் வேலை செய்யும் ஒருவரை பட்டாசு கடையில் உட்கார வைத்தால் என்னவாகும் என்பதே இந்த கதை. 

இந்த கதையின் மூலம் யாரை எங்க உட்கார வைக்கனுமோ அவங்கள அங்க தான் உட்கார வைக்கனும் என்று சொல்லி முடித்தார். இந்நிலையில், விஜய் பேசிய அந்த பட்டாசு கடை கதை வேறொருவரால் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசப்பட்டது என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து. 

அந்த பேச்சின் அட்டர் காப்பி தான் விஜயின் இந்த பேச்சு என்று அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள். அதற்கு பதிலடி கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள், குட்டிகதை என்பதே மற்றவர்கள் சொல்வதை கேட்டு அதை பிறருக்கு சொல்வது தான் என்று கூறி வருகிறார்கள்.


Previous Post Next Post
--Advertisement--