தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த 'பொய் சொல்ல போறோம்' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பியா பாஜ்பாய். அதன்பின் 'கோவா, பலே பாண்டியா, கோ, கூட்டம், அபியும் அனுவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், தொடர்ந்து பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். நடிகையாவதற்கு முன்பு அவர் விமானபணிப்பெண்ணாக பணியாற்றியவர்.
தற்போது அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். பத்து வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ இன்னும் அதே உடற்கட்டுடன் இளங்குயிலாக தான் இருக்கிறார்.
காரணம், தினமும் உடற்பயிற்சி செய்வது தான் என்கிறார் அம்மணி. இப்படி இருப்பவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களைப் தட்டிவிட்டு தன் இளமையை ரசிகர்களுக்கும், இந்த சினிமா உலகத்திற்கும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் அதனை நிருப்பிக்கும் வகையில் தான் இருக்கின்றது. 'இப்படித்தான் எழுந்திருப்பேன்' என அப்படத்திற்கு தலைப்பு போட்டிருக்கிறார். இப்புகைப்படம் எப்படியும் சில இயக்குனர்களின் கண்களில் படும் என்று நம்புவோம்...!