சமீப காலமாக சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் சினிமாவில் பிரபலங்களாக முன்னேறி வருகிறார்கள். யுடியூப்சேனல், டிக்டாக் போன்றவற்றின் மூலம் எளிதாகவும், நேரடியாகவும் மக்களை சென்றடையும் இவர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள்.
அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் டப்ஸ்மாஷ் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளை பெற்றவர் மிருணாளினி ரவி. படத்தில் டயலாக்குகளையும், பாடல்களையும் பார்த்து நடித்து வந்தார்.
இதனால் பெரிதும் பேசப்பட்டு படவாய்ப்புகளை பெற்றார். முதன்முதலில் விஜய் சேதுபதி படமான சூப்பர் டீலக்ஸில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் ஜிகிர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து புகழ் பெற்று கலக்கி வருகிறார்.
இந்நிலையில், சமுகவலைத்தளத்தில் தற்போது போட்டோஹுட் எடுத்து அதனை பகிர்ந்தும் வருகிறார். கவர்ச்சிக்கு இடம் கொடுத்து வரும் மிருணாளினி கடற்கரை மணலில் கிழிந்த பேன்ட்-ஐ அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.