அழகு தேவதை ரம்பாவா இது..? - ஆள் அடையாளம் தெரியாமல் ஆண் போல மாறி விட்டாரே..! - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!


நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் ஹிட். 

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் லாவண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர்.

ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாரானார்கள். இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் குடும்பத்தினர் சமரசம் பேசி மீண்டும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். 


இந்நிலையில், தற்போது ஆளே மாறி அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளார். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இது ரம்பா தானா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிரார்கள்.

Previous Post Next Post
--Advertisement--