நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “இவன் வேற மாதிரி” இப்படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் அழகு பொம்மையாக சுரபி.
இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைத்து வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவர் குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழ் மற்றும் தனது கவனத்தை செலுத்தாமல் தெலுங்கிலும் தற்போது கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் கையில் மூன்று தெலுங்கு படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலான நடிகைகள் தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக நடித்து பிறமொழி படங்களில் கவர்ச்சி காட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், சோஃபாவில் அல்ல சோஃபாவின் மேலே அமருங்கள் என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.



