தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் தன்னை பயன்படுத்தி விட்டு ஏமாற்றி விட்டதாக புகார் கூறினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர். அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.
முகநூல் பக்கத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் விவரங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை சாடினார். 3 திருமணங்கள் செய்தவர். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலுக்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் வசை பாடினார். இதுபோல் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார்.
இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். தங்களை மோசமாகவும், அவதூறாகவும் பேசி வருவதாக புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அத்துடன் ஸ்ரீரெட்டி பேசிய மோசமான வீடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.
இந்த விவகாரத்தில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது தனுடைய முகநூல் பக்கத்தில் மோசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது, " இந்த சமூகத்திற்கு நல்ல செய்ய எனக்கு இரண்டு Ball-கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன..? என்னிடம் Va*ina இருந்தாலும், இந்த சமூகத்திற்கு கெட்டது செய்பவர்களின் இரண்டு Ball-களையும் நீக்கிவிடுவேன்" என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை கண்டபடி விளாசி வருகிறார்கள்.
