தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை மெஹ்ரின். தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.அந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான தனுஷ் நடித்த "பட்டாஸ்" படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் மெஹ்ரின்.
இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாகநடித்திருந்தார் மெஹ்ரீன்.
இந்த படத்திற்கான நாயகி தேடப்பட்டு வந்தபோது, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த வேடத்துக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம்.
சமீபத்தில்,தெலுங்கில் வெளியான F2 என்ற படத்தில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் அம்மணி. கடந்த வாரம் நடைபெற்ற ஃப்லிம் பேர் விருது விழாவில் கலந்து கொண்ட அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் தோன்றினார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை பளிச்சென காட்டும் வகையில் நீச்சல் உடையை அணிந்துகொண்டு ரசிகர்களை வாயைப்பிளக்க வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நெய் குழந்தை மாதிரி இருக்கீங்க என்று ஜொள்வடித்து வருகிறார்கள்.





