தமிழ் திரையுலகில் நடிகர் பரத் நடித்து வெளிவந்த திரைபடமான காதல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சந்தியா. இந்த ஒரு படம் தான் தற்போது வரை இவரை காதல் சந்தியா என்று அழைக்க காரணமே.
இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தவர் அது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைப்பது தான் வழக்கம், படத்தில்தான் காதல் என்றால் அவருடைய வாழ்க்கையிலும் காதல் தான்.
அதாவது அவர் சென்னையில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கும் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் பெயர் சந்திரசேகர். மேலும் இவர்களுடைய திருமணம் ஆனது 2015ஆம் ஆண்டு நடைபெற்றது.
மேலும் கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் இவருக்கு சினிமா என்ற ஒரு அழகான பெண் குட்டியும் பிறந்து விட்டது. குழந்தை பிறந்த அந்த தருணத்தை கடந்த பிறகு நடிகை சந்தியா திரைப்படம் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.
சமீபத்தில் கூட கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இது நம்ம காதல் சந்தியாவா? என்று ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் உள்ளார்கள்.
மேலும் கடந்த வருடம் அவருடைய குழந்தையுடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம்கூட அவரின் உடலில் அழகில் மாற்றமே கிடையாது என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.
இப்படி சொட்ட சொட்ட நனைந்த உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிடும் சந்தியா எதற்கு என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு எழுந்து வருகிறது. இவர் மறுபடியும் சினிமாவிற்கு வருவாரா..? என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளத்தில் கடல் அலைபோல இளசுகளை சுனாமி போல அடித்து சென்றுவிட்டார்.
Tags
Sandhya Jagarlamudi