அம்மாடியோவ்..! - சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய பானு ப்ரியா - வைரலான வீடியோ - ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ் திரை உலகில் 80ஸ் காலகட்டத்தில் இருக்கும் நடிகைகளில் ரசிகர்களால் இடுப்பழகி என்று பெயரைப் பெற்றவர் தான் பானுப்ரியா. இவருடைய தனித்திறமை என்னவென்றால் குச்சுப்புடி நடனம் மற்றும் பரதம் போன்ற பல திறமைகளைத் தனக்குள் வைத்திருக்கிறார். 
 
இவருடைய இடுப்பு மடிப்பை பார்த்து மடியாத ரசிகர்கலே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமல்லாமல் இவருடைய கண்களைப் பார்க்கும் பொழுது கண்களில் ஏதோ காந்தம் இருப்பதுபோல நம்மளை சுண்டி இழுக்கும். இவர் எப்படி திரை உலகிற்கு உள்நுழைந்தார் என்பதை நாம் தற்பொழுது பார்ப்போம். 
 
இவர் பள்ளிப்படிப்பு படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் கலந்து கொண்டாராம். அதில் இவருடைய தோற்றம் மற்றும் முகபாவனைகளை கண்டு இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படத்தில் நடிகையாக நடிக்க தீர்மானித்தார். 
 
ஆனால் அவருக்கோ அப்பொழுது 14 வயது இருந்ததால் நடிக்கவில்லை.அதன் பிறகு மீண்டும் மெல்ல பேசுங்கள் என்னும் திரைப்படத்தில் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கொடுத்தது என்னவோ ஆராரோ ஆரிராரோ என்ற திரைப்படம்தான். இத்திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் அவருடன் நடித்திருப்பார். 
 
மேலும் இவர் கிட்டத்தட்ட 80 தெலுங்கு திரைப்படங்களிலும், சுமார் 35 தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதன்பிறகு நடிகை பானுப்ரியா 1998-ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து காதல் திருமணம் செய்துகொண்டார். 
 
சில பல கருத்துவேறுபாடு காரணத்தினால் இவர்கள் இருவருமே கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அந்த வகையில் தற்பொழுது நடிகை பானுப்பிரியா அவர்கள் தனது 14 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டு வருகிறார். 
 
இவர் அடிக்கடி தமிழ் மற்றும் தெலுங்கில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா அவர்களுடன் மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இன்றளவும் கூட இவருக்கு தனி ரசிகர்களும் உண்டு. 
 
 
அந்த வகையில் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு நடிகை பானுப்பிரியா படுமோசமாகவும் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய கவர்ச்சியை முற்றிலும் காட்டியபடி ஒரு ஹாட்டான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் தீயாய் பரவி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--