குடிக்கவே தண்ணி இல்ல.. - வெறும் ப்ராவில் பீர் குளியல் போடும் ஸ்ரீரெட்டி - தீயாய் பரவும் புகைப்படம்..!


தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்ப் பிரப‌லங்கள் குறித்து கருத்து பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.‌ 
 
பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை படுக்கையை பகிர அழைக்கும் பழக்கம் தெலுங்கு‌‌ திரையுலகில் உள்ளதாக தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 
 
அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதற்கா‌ன ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்றை வலைபக்கத்தில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பினார். 
 
பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை தவறாக ஈடு‌ப‌ட அழைப்பு விடுக்கப்பட்டது என கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்‌கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன. 
 
இவற்றுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட‌ வர்த்தக சபை முன்பு போர‌ட்டம் நடத்தி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்‌‌. 
 
கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். 
 
 
இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பீர் நிரப்பப்பட்ட பாத் டப்பில் அமர்ந்து கொண்டு மதுவருந்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.