நடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு ‘அட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தில் இவர் நடித்த குமுதா கதாபாத்திரம் இன்றும் அனைவரின் ஃபேவேரெட்டாக உள்ளது.மேலும் நந்திதா சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது.
அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.
இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக கைகளை தூக்கி தன்னுடைய இடை அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை வளைத்து போட்டுள்ளார் அம்மணி. மாடர்ன் உடைகளை விட சேலையில் தான் கும்முன்னு இருக்கீங்க குமுதா என்ற கருத்துக்களும் பறந்து வருகின்றது.