"அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. " - வேற மாதிரி அழகில் மிரட்டும் "கர்ணன்" ரஜிஷா விஜயன்..!

 
மலையாளத்தில் கடந்த 2016ல் அனுராக கரிக்கின் வெள்ளம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றவர். 
 
தமிழில் மாரி செல்வராஜ் டைரக்சனில் தனுஷ் நடிப்பில் உருவாகி ஹிட் அடித்த கர்ணன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் அடக்கமாகவே நடித்து வருகிறார் என ரசிகர்கள் பலரும் நேற்று தான் இவரை புகழ்ந்து தள்ளி வந்தனர்.
 
சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். 
 
 
ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது. 
 
 
கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.


சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. என்று விதம் விதமாக வர்ணித்து வருகின்றனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்