மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
சமீபத்தில் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இதுதவிர ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் பூர்ணா.
அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுத்த பூர்ணா, அவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவின. ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். அதிகம் விமர்சனங்களை சந்தித்து வரும் பூர்ண அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தான் முத்தம் கொடுத்த அந்த பையனை தான் குழந்தை போல நினைப்பதாக கூறி உள்ளார். யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நன்றாகவேதெரியும்.
இது அன்பை வெளிப்படுத்தும் விதம் மட்டும் தான் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், பிகினி உடையில்.. பிதுங்கும் தொப்பை தெரிய என சில கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
0 கருத்துகள்