கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீராவுக்கு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது. அப்போது கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் போல்டாக நீருக்கு அடியில் கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார்.
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஓவராக உடல் எடை கூடிய சமீரா ரெட்டி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது குண்டான உடலை கேலி செய்து வந்தனர்.
பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்ததும் தன்னுடைய உடல் எடையை குறைத்தார். எப்போதும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சமீரா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், காற்றில் பாவடையை பறக்க விட்டு சமீரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள, இன்னும் ஒரு இன்ச் தான்.. மொத்த மானமும் போயிருக்கும்.. என கலாய்த்து வருகிறார்கள்.
Tags
Sameera Reddy