"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - படு சூடான கவர்ச்சி உடையில்.. பனி சிலை போல நிற்கும் "பட்டாஸ்" ஹீரோயின்..!

 
நடிகை மெஹரீன் பிர்சாடா திருமண செய்து கொண்டு, திரையுலகை விட்டே விலகுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என தன்னுடைய திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்து ஷாக் கொடுத்தார். 
 
சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா. விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார். 
 
தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மெஹ்ரீனுக்கும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 
 
 
ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் கொரோனா தலை தூங்கியதால் இவர்களது திருமணம் தள்ளி போனதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் திடீர் என Bhavya Bishnoi-யுடன் நடக்கவிருந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் மெஹரீன். 
 
 
இதுகுறித்து காரணத்தை பற்றி இனி யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். திருமணம் நடைபெற இருந்ததால், சில தேடி வந்த சில படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து விட்ட மெஹரீன் தற்போது, தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்.


பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.