கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் தமிழ்,தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். 2013 ம் ஆண்டு 'விழா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
19 வயதாகும் இளம் நடிகையான மாளவிகா மேனன் தற்போது தமிழில் அதிராஜன் இயக்கும் அருவா சண்ட படத்தில் நடித்து வருகிறார். அருவா சண்ட படத்தில் வைரமுத்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
'ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மீனாக' என்ற பாடலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கினார்கள். இந்த பாடல் ஹீரோயினை அறிமுகப்படுத்தும் பாடல் .இதில் இயக்குனர் கொடுத்த உடையை மாளவிகா மேனன் அணிய மறுத்து விட்டார்.
நீங்கள் கவர்ச்சி உடை என்கிறீர்கள்.ஆனால் இது மிகவும் சிறியதாக உள்ளது. இது போன்ற தொடை தெரியும் அளவுக்கு இருக்கும் சிறிய உடையை நான் அணிய மாட்டேன் என்றார். இதனால் படப்பிடிப்பு ஒரு மணிநேரம் இதையடுத்து இயக்குனர் வேறு ஒரு உடையை மாற்றி கொடுத்தார்.
அதன் பிறகு பாடல் காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார் மாளவிகா. இப்படி எல்லாம் அடம் பிடித்த அம்மணி. இப்போது எத்துனூண்டு ட்ரவுசர் போட்டுக்கிட்டு ஆட்டம் போடுறாங்கன்னு நீங்களே பாருங்களேன்..
0 கருத்துகள்