விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதற்கு முன்பே, இந்த சீசன் குறித்தான யூகங்கள் இணையங்களில் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியது. போதாக்குறைக்கு விஜய் டிவியும் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என யூகியுங்கள் என்று கொளுத்திப்போட்டது.
டிவியில் தங்களுக்கென சோர்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரளவு, பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் நபர்களின் பெயர்களை கணித்திருந்தார்கள். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா, யூ டியூப்பில் சினிமா விமர்சனம் செய்து பிரபலமான அபிஷேக் ஆகியோரின் பெயர்கள் முன்பே அரசல் புரசலாக தெரிந்துவிட்டது.
மற்ற போட்டியாளர்களின் பெயர்கள் மக்களுக்கு சர்பிரைஸாக இருந்தது. ஒருவழியாக பிக்பாஸ் தொடங்கி ஏறக்குறைய 60 நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போட்டியின் தொடக்கத்தில் 18 பேர் இருந்த நிலையில் தற்போது வரை 3 பேர் வெளியேறி 15 பேர் மட்டுமே வீட்டிற்குள் இருக்கின்றனர்.
நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து ஏன் விலகினார் என்ற தகவல் இதுவரை முழுமையாக தெரியவில்லை. நாடியா சாங் மற்றும் அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று எலிமினேட்டாகினர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பாவனி ரெட்டி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி ஆகிய தொடர்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இருப்பினும், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்பு வெள்ளித்திரையில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் தலையீட்டால் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, தட்டு தடுமாறி பிக்பாஸ் நிகழ்சியில் தொடர்ந்து வரும் இவரது இன்ஸ்டா பக்கத்தை இவரது அட்மின் நிர்வகித்து வருகிறார்.