பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..!

பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..! | Country Singer Chinnaponnu explains about Kanimozhi helping nature

பிரபல பாடகி சின்னப்பொண்ணு

விபத்தில் சிக்கி இறந்த நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு என்கிற செய்தியை கேட்டதும் கனிமொழி அவர்கள் செய்த நெகிழ்ச்சியான விஷயத்தைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். 

பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அவர்கள் தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசியவர் ஒரு முறை நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பிக் கொண்டிருந்தோம்.

விபத்தில் சிக்க மரணம்?

பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..! | Country Singer Chinnaponnu explains about Kanimozhi helping nature

அப்போது நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நானும் என் கணவரும் செத்துப் பிழைத்தோம். நாங்கள் இருவரும் விபத்தில் இறந்து விட்டதாகவே தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. 

அந்த அளவுக்கு ஒரு பெரிய விபத்தாக இருந்தது. இது கனிமொழி அவர்களின் கவனத்திற்கு செல்லவே.. உடனே ஆட்களை அனுப்பி சின்ன பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாருங்க என்று சொன்னார். 

அவர்கள் விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து கனிமொழி அவர்களிடம் கூறினார்கள். உடனே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போன் செய்து சின்ன பொண்ணுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். 

கனிமொழி செய்த நெகிழ்ச்சி சம்பவம்

அப்படி ஏதேனும் அவசியம் ஏற்பட்டால் சென்னைக்கு அனுப்பி வையுங்கள் நாங்கள் பாத்துக்குறோம் என்று கூறியிருக்கிறார். 

பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..! | Country Singer Chinnaponnu explains about Kanimozhi helping nature

உடனே நான் இருக்கும் வார்டை நோக்கி வந்த அந்த மருத்துவமனையின் டீன் கனிமொழி மேடம் உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தால்.. நேரடியாக போன் செய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருப்பார் என்று என்னிடம் கூறினார்.

அவர் அப்படி சொன்னபோது எனக்கு இருந்த வலியெல்லாம் பறந்து போய்விட்டது. என்னுடைய பின் நெற்றியில் பலத்த அடி பட்டிருந்தது என்னுடைய நெற்றியை இழுத்து வைத்து தையல் போட்டதால் ஒரு மாதிரி அசிங்கமாக இருந்தது. 

அந்த நேரத்தில் சங்கமம் நிகழ்ச்சிக்கு எல்லோரும் சென்றார்கள் ஆனால் என்னுடைய வீட்டில் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் அடம் பிடித்து அங்கு போனேன். 

பாடகி சின்னப்பொண்ணு விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என பதறிய கனிமொழி..நெகிழ்ச்சி சம்பவம்..! | Country Singer Chinnaponnu explains about Kanimozhi helping nature

அங்கே கனிமொழி அவர்களும் வந்திருந்தார்கள். என்னை நலம் விசாரித்தார். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு நெற்றியில் உள்ள தழும்பை சரி செய்து கொள்கிறேன் என்று என்னுடைய நெற்றியை காட்டினேன். 

அப்போது சர்ஜரி எல்லாம் எதுக்குங்க பண்றீங்க..? இதுதான் உங்களுடைய உடம்பில் அடையாளம். அப்படியே விட்டுடுங்க என்று சொன்னார். அதனால் அப்படியே விட்டு விட்டேன் என கூறியிருக்கிறார் சின்னப்பொண்ணு. 

இவருடைய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--