சேலம் மாவட்டத்தின் அமைதியான கிராமமான இளம்பிள்ளை அருகேயுள்ள அழகனூர் ஆசாரி பட்டறை பகுதி. அங்கு வசிக்கும் ஜெயலட்சுமி (பெயர் மாற்றப்பட்டது) தனது கணவரை இழந்த பின்னர், இரண்டு மகள்களைத் தனியாக வளர்த்து வந்தார்.
மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், இளைய மகள் தேவிப்பிரியா (பெயர் மாற்றப்பட்டது) – 22 வயது இளம் பெண் – தனது கனவுகளுடன் வாழ்ந்து வந்தாள்.

தேவிப்பிரியா இளங்கலை கல்வியியல் முடித்து, அருகிலுள்ள தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள். குழந்தைகளின் சிரிப்புகளுக்கு நடுவே, அவள் தனது எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டாள். ஆனால், அந்தக் கனவுகளில் ஒரு நிழல் படர்ந்தது – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சந்தித்த கௌதம்.
அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கௌதம். இருவரும் முதலில் நட்பாகப் பழகினர். பின்னர் அது காதலாக மாறியது. பேச்சுகள், சிரிப்புகள், சில நெருக்கமான தருணங்கள்... எல்லாமே இனிமையாகத் தொடங்கியது. ஆனால், சில மாதங்களில் கௌதமின் நடத்தை மாறத் தொடங்கியது.
அவனது பேச்சுகள், கோரிக்கைகள் – எல்லாமே தேவிப்பிரியாவை அசௌகரியப்படுத்தின. இறுதியில், அவள் காதலை முடித்து வைத்தாள். பேசுவதை நிறுத்தினாள். தனது வாழ்க்கையை மீண்டும் ஒழுங்குபடுத்த முயன்றாள்.
ஆனால் கௌதம் விடவில்லை. தொடர்ந்து போனில் அழைப்புகள், செய்திகள், மிரட்டல்கள். "என்னை விட்டால் உன் வாழ்க்கையை அழித்துவிடுவேன்" என்று சொல்லத் தொடங்கினான். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் பேச்சு வீட்டில் எழுந்தபோது, அவனது ஆத்திரம் எல்லை மீறியது.
ஒரு நாள், காதலித்த காலத்தில் எடுத்த சில புகைப்படங்களை – அவை அந்தரங்கமானவை – மாப்பிள்ளை வீட்டாருக்கு இருவரும் காதலில் இருந்த போது தனிமையில் இருந்த காட்சிகளை புகைப்படமாக அனுப்பி வைத்தான். திருமணப் பேச்சு உடைந்தது. திருமணத்தை நிறுத்தினர் மாப்பிள்ளை வீட்டார். தேவிப்பிரியாவின் குடும்பம் திகைத்தது.
தேவிப்பிரியா மனம் உடைந்தாள். இன்னும் மிரட்டல் தொடர்ந்தது. "இன்ஸ்டாகிராமில் எல்லா புகைப்படங்களையும் போட்டுவிடுவேன்" என்று அவன் சொன்னான். அவமானம், பயம், குற்ற உணர்வு – எல்லாமே அவளை சூழ்ந்தது.
வீட்டில் யாரும் இல்லாத ஒரு மதிய வேளை. தேவிப்பிரியா தனியாக இருந்தாள். அவள் அறையில் ஒரு சிறிய மேசை. அதில் நான்கு பக்க கடிதம் எழுதினாள். கையெழுத்து நடுங்கியது. கண்ணீர் வழிந்தது.
"நான் எடுக்கும் இந்த முடிவு கோழைத்தனமானது தான்... ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதற்கு காரணம் கௌதம் தான். அவனை சும்மா விடாதீங்க... நான் நல்லா வாழ ஆசைப்பட்டேன்... ஆனால் அவன் என்னை விடல... அவனை மட்டும் சும்மா விட்றாதீங்க.."
கடிதத்தை மேசையில் வைத்துவிட்டு, அவள் சேலையை எடுத்து மின்விசிறியில் கட்டினாள். அந்தக் கணம், சில நிமிடம் துடிதுடித்தாள், அடுத்த சில நிமிடங்களில் அவளது உலகம் நின்று விட்டது.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அறையில் கிடைத்த கடிதத்தைப் பார்த்து அதிர்ந்தனர். கையெழுத்து பொருந்துகிறதா என தீவிர விசாரணை தொடங்கியது. கௌதமைத் தேடும் பணி தீவிரமடைந்தது.
அந்தச் சிறிய கிராமத்தில் பரபரப்பு. குழந்தைகளுக்கு பாடம் எடுத்த இளம் ஆசிரியை... அவளது சிரிப்பு இப்போது இல்லை. காதல் என்ற பெயரில் வந்த டார்ச்சர் ஒரு உயிரைப் பறித்துவிட்டது. குடும்பம் தவிக்கிறது. அக்கம் பக்கத்தினர் பேசுகிறார்கள். "என்ன கொடுமை இது..." என்று.
தேவிப்பிரியாவின் கடிதம் இன்றும் அந்த அறையில் இருக்கிறது – ஒரு எச்சரிக்கையாக, ஒரு சோகக் கதையாக. காதல் என்றால் என்ன? மரியாதை இல்லாத உறவு எப்படி கொலை செய்யும்? இந்தக் கேள்விகள் அந்த ஊரில் இன்னும் எதிரொலிக்கின்றன.
Summary in English : A 22-year-old temporary school teacher from Salem district ended her life at home after facing persistent harassment from a former acquaintance. Family discovered a note blaming the individual for the distress. Police are investigating the matter.

