என் அப்பா இறந்த போது நான் அழவில்லை.. இது தான் காரணம் சிம்பு பட நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்..!

என் அப்பா இறந்த போது நான் அழவில்லை.. இதுதான் காரணம்.. சிம்பு பட நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்..!

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ஆடா ஷர்மா. ஆனால் இப்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார்.

இவர் சிலம்பரசன் நடித்த இது நம்ம ஆளு படத்தில், ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடிய வகையில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஒரு நடிகையாக இருக்கிறார்.

ஆடா ஷர்மா

பள்ளி படிப்பை முடித்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டில் ஆடா ஷர்மா 1920 என்ற இந்தி திகில் படத்தில் நடித்தார். இந்த படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார்.

காதல் காமெடி படம்

அந்தளவுக்கு விறுவிறுப்பான ஒரு சிலிர்ப்பான நடிப்பு அனுபவத்தை ஆடா ஷர்மா வெளிப்படுத்தி இருந்தார்.

அடுத்து, ஹசீ தோ பசீ என்ற காதல் காமெடி படத்தில் ஆடா ஷர்மா நடித்திருந்தார். இது வணிக ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆடா ஷர்மாவுக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.

தெலுங்கு படங்களில்…

ஹார்ட் அட்டாக், சன் ஆப் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியம் விற்பனை, சனம், கரம் ஆகிய படங்களில் நடித்த வகையில், இன்னும் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

அடுத்து 2015ம் ஆண்டில் ராணா விக்ரமா என்ற கன்னட படத்திலும் ஆடா ஷர்மா நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது, கன்னட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சினிமா விமர்சகர்களும் பாராட்டினர்.

இந்தி மற்றும் கன்னடம் படங்களில் நடித்தாலும் ஆடா ஷர்மாவுக்கு தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க அதிகளவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அவர் நடித்த தெலுங்கு படங்களும் ஹிட் ஆனதால், முன்னணி நடிகையாக தெலுங்கில் ஆடா ஷர்மா இருந்து வருகிறார்.

அப்பா இறந்த பொழுது..

இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகை ஆடா ஷர்மா கூறியதாவது, என் அப்பா இறந்த பொழுது நான் அழவே இல்லை. ஏனென்றால் என் அப்பா இறந்துவிட்டார் என்றதும் நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

அடுத்து என்ன செய்வது, ஏது செய்வது என்று எந்த மனநிலையும் எனக்குள் இல்லை, அவர் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே என்னுடைய தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனக்கு தோன்றவில்லை…

அடுத்து என்ன செய்யப் போகிறோம், கடவுளே என்ற எண்ணமும் உடல் முழுக்க கனகனவென காய்ச்சல் அடிக்கும் உணர்வு மட்டுமே எனக்கு ஏற்பட்டது. அழ வேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.

அந்த அளவுக்கு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என கூறியிருக்கிறார், இது நம்ம ஆளு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட சிம்பு பட நடிகை ஆடா ஷர்மா.