சன் TV-க்கு போனதும் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு..! இது தான் தவளை தன் வாயால் கெடும் என்பதா..? ரசிகர்கள் விளாசல்.!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்தது குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்களை முடித்து 5வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது.

குக் வித் கோமாளி

5வது சீசன் வரை குத் வித் கோமாளி செல்ல, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்புதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய நடுவர்களாக இருந்த செப்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமோதரன் இருவரும் சமீபத்தில் விலகி இருந்தனர்.

வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், நடுவராக இருந்து வெங்கடேஷ் பட் அதிலிருந்து விலகிய நிலையில், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக் டூப்பு குக் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்து இருக்கிறார்.

இந்த பிரமோ நேற்று வெளியானது. இந் நிலையில் அந்த பிரமோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ்பட், அது குறித்த பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

--Advertisement--

நடுவர்கள் விலகல்

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன்கள் நான்கு வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்து ஐந்தாவது சீசன் துவங்கும் முன்பே அதற்கு பின்னணியில் நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

அதனால் தான் நான்கு சீசன்களாக இருந்த நடுவர்களான வெங்கடேஷ் பட், தாமோதரன் வெளியேறுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்த தயாரிப்பாளர், இயக்குனர் எனபலரும் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, ஐந்தாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, இத்தனை சீசன்களாக இருந்த வெங்கடேஷ் பட் குறித்து யாரும் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

உண்மை ஒரு நாள் வெல்லும்

இந்த நிலையில் அதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட், உண்மை ஒருநாள் வெல்லும் என்று கூறியிருந்தார்.அதோடு இன்று இரவு 8 மணிக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து வெளியே வந்ததும், அவர் சன் டிவி நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் கூறியிருந்தனர். அதை உறுதிப்படுத்தி விதமாக நேற்று டாப் குக்கு டூப்பு குக்கு என்ற புத்தம்புது நிகழ்ச்சிக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளிகள் கோமாளிகள்

இதில் ஜிபி முத்து, தீபா, மோனிஷா, சரத், தீனா, அதிர்ச்சி அருண் உட்பட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த பலர், சன் டிவி நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் மட்டும் இன்றி, இந்த புது நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிரபலங்களும் குக்காக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றும் வெங்கடேஷ் பட் அந்த பிரமோவில் கூறியிருக்கிறார். இந்த பிரமோ வெளியானதும் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த பிரமோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வெங்கடேஷ்,

The Content is king always and content that is original is the Emperor .. A fresh new show from the stables of Media Masons on Sun TV very soon…..as always with all your support embarking on a new journey என்று குறிப்பிட்டு இருந்தார்.

தவளை தன் வாயால் கெடும்

இதற்கு ரசிகர்கள், உங்களை மிஸ் செய்கிறோம் என்று ரசிகர்கள் பேசவில்லை. உண்மை ஒருநாள் வெளிவரும் என்று கூறி இருந்தீர்கள். நீங்கள் நான்கு வருடமாய் பணியாற்றிய விஜய் டிவியில் இருந்து வெளியே வந்ததும், சன் டிவியில் நீங்கள் நடுவராக பங்கேற்கும் நிகழ்ச்சி தான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்று கூறுவது சரியா என்று கடுப்பாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சன் TV-க்கு போனதும் வெங்கடேஷ் பட் போட்ட இந்த பதிவால், இதுதான் தவளை தன் வாயால் கெடும் என்பது என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.