“நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்.. ஆள் இல்லாத தெரு..” ஆட்டோவில் தனக்கு நடந்த கொடூரம்.. கதறும் அனிதா சம்பத்..

அனிதா சம்பத் : பிரபல செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகையான அனிதா சம்பத் சமீபத்தில் ஆட்டோவில் தனக்கு நடந்த கொடூரம் குறித்து கேட்டு ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் நியூஸ் 7 நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன்.

ஏறிய பிறகு, அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னை பார்த்து.. அம்மா.. உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று கேட்டார்.

அனிதா சம்பத்

ஆமா அண்ணா, நான் செய்தி வாசிப்பாளராக டிவியில் வேலை செஞ்சிட்டு இருக்கேன் என்று கூறினேன். அதற்கு அடுத்ததாக ஆட்டோ ஓட்டுனர் ஒரு வார்த்தை கூறினார். எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது.

நீங்கள் சன் மியூசிக்கில் வரக்கூடிய மணிமேகலை தானே.. என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதன் பிறகு தெளிவாக நான் கூறினேன். அன்று முழுதும் எனக்கு என்ன யோசிப்பது என்றே தெரியவில்லை.

என்னை பார்த்து வேறு ஒரு பிரபலம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த ஆட்டோ ஓட்டுனர். இதில் கொடூரம் என்னவென்றால் இன்னும் எத்தனை பேர் இது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே என இருந்தேன்.

பிறகு ஒரு நாள் அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு இளைஞர்கள் சர்ர்ரென வண்டியில் வந்து அருகில் நிறுத்தினார்கள். அதில் ஒருவர் வேகமாக இறங்கி மேடம் உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கணும் என கேட்டான்.

என்னை யாரும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்த்திருக்க மாட்டார்களே.. நாம் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது. இவர்கள் வேறு செல்ஃபி எடுக்க வேண்டும் எனக்கு கேட்கிறார்கள்.

அந்த பையனை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆள் பார்ப்பதற்கு ரவுடி போல இருந்தான். அந்த தெருவிலும் யாரும் இல்லை. என்ன செய்வது..? என்று தெரியாமல் இருந்தேன்.

அவனுடைய நண்பனிடம் டே.. சீக்கிரம் வாடா.. வாடா சன் மியூசிக் மணிமேகலை வந்து இருக்காங்க செல்பி எடுத்துக்கலாம் என்று அழைத்தான்..? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்.. அதன் பிறகு அவனிடம் தெளிவாக கூறிவிட்டு நான் மணிமேகலை கிடையாது.. அனிதா சம்பத்.. செய்தி வாசிப்பவர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து நடந்து வந்தேன் என கூறியிருக்கிறார்.

   

--Advertisement--