“என் வாயில் இருந்த எச்சில் பபுள் கம்மை எடுத்து..” - வெக்கமின்றி கூறிய அஞ்சலி..!

“என் வாயில் இருந்த எச்சில் பபுள் கம்மை எடுத்து..”- வெக்கமின்றி கூறிய அஞ்சலி..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி கணித பட்டதாரியாக திகழ்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே விளம்பர படங்களில் நடித்த பிறகு திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். குறிப்பாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமயத்தில் தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அஞ்சலி..

அந்த வகையில் நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் விரைவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறு விடுவார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டது.

2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கும் இவர் அடுத்தடுத்து படங்களில் மிக நேர்த்தியான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து தெலுங்கு தமிழ் உடன் நின்றுவிடாமல் மலையாளத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை அஞ்சலி பற்றிய பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்து நிலையில் நடிகர் ஜெயுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவரை விட்டு பிரிந்து மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தமிழில் அவர் நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை விரைவில் வெளிவரக்கூடிய நிலையில் உள்ளதாக கூறி இருக்கும் இவர், தன்னை பற்றி தனக்கே தெரியாமல் திருமணம் ஆனதை நினைத்து சிரித்து கொண்டதாக சூசகமாக பேசி இருக்கிறார்.

பபுள் கம் ஷேரிங்..

இதனை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நடிகர் யாராவது ஒருவரோடு உங்களது பபுள்கம்மை பகிர்ந்து இருக்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் என் வாயில் இருந்த எச்சில் பபுள்கம் மையா? எடுத்து என வெட்கமின்றி கேள்வியை மீண்டும் கேட்டார். அதனைத் தொடர்ந்து இந்தக் கேள்விக்கு பதில் அளித்த நடிகை அஞ்சலி பபுள்கம்மை பகிர்ந்து கொள்வது என்றால் நான் மென்று சுவைத்த என்னுடைய வாயில் இருந்து எச்சிலோடு இருக்கும் பபுள்கம்மை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதை பற்றி தானே கேட்டீர்கள்.

இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பலரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் நான் பகிர்ந்து கொண்டது கிடையாது என்றே சொல்லி விடுகிறேன் என்று நாசுக்காக பதில் அளித்து இருக்கிறார்.

எனினும் ரசிகர்கள் அவர்களுடைய மன நிலைக்கு ஏற்ப மூளைக்குள் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனை குதிரைகளை தட்டி விட்டு பலவிதமான கற்பனைகளில் பறந்து வருகிறார்கள்.

இவர்களின் கற்பனை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அந்த அளவு கூடுதல் கலவைகளை சேர்த்து இவர்கள் எண்ணங்கள் அலைபாய விட்டு விட்டார்கள்.