பப்லூவுக்கு திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க பாஸ்..

பப்லூவுக்கு திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க பாஸ்..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லூ பிருத்விராஜ். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பப்லூ, ஒரு கட்டத்தில் படத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அவருக்கு துணை கதாபாத்திரங்களே அதிகமாக அமைந்தன. சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். பல ஆண்டுகளுக்கு முன் தனியார் டிவியில் இவர் நடத்திய சவால் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

பப்லூ பிருத்விராஜ்

தனது மனைவியை பிரிந்து வாழும் பப்லூ பிருத்விராஜ், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன் மகனையும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் பப்லூவின் மனைவி, தன் மகனுக்காக வாழ்ந்துவரும் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷீத்தல்

இந்நிலையில், அடிக்கடி ஜிம்முக்கு செல்லும் பாடி பில்டரான பப்லூ பிருத்விராஜ், அங்கு ஒர்க் அவுட் பண்ண வந்த ஷீத்தல் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் 24 வயது வித்யாசம் இருந்த நிலையிலும், காதல் மலர்ந்தது. அன்பில் நெருக்கம் அதிகரித்தது.

வீட்டில் டிரெயினிங்

மகள் வயதுள்ள கட்டழகி பெண் ஷீத்தலை அழைத்து வந்து, பப்லூ வீட்டில் வைத்து ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து குடும்பம் நடத்தினார். இதற்கிடையே இருவரும் கொஞ்சி குழாவும் புகைப்படங்களும், பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் செம டிரண்டிங் ஆகின.

இதையும் படியுங்கள்:கணவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா..! கணவரின் பதிலை பாருங்க..!

பெண் துணை முக்கியம்

ஊர் உலகம் எதையோ பேசிவிட்டு போகட்டும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என் வாழ்க்கை, அதில் என் சந்தோஷம் எனக்கு முக்கியம். என் பெண் துணை இப்போதும் மிக தேவையாக இருக்கிறது என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டு, ஷீத்தலுடன் இருப்பதற்கான காரணத்தை சொன்னார் பப்லூ.

ஆனால் சில மாதங்களுக்கு பிறகு, பப்லூவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் ஷீத்தல், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போதும், யூடியூப் நேர்காணலின் போதும் ஷீத்தல் குறித்த கேள்விகளை தவிர்க்க ஆரம்பித்தார் பப்லூ.

பிரிந்த நிலையில்…

தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்த நிலையில், இப்போது இருவருமே தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர். எனினும் பிரிந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து அவர்களை பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், அனிமல் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்த பப்லூ, அந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்துக்கொண்ட போது, அங்கு ஷீத்தலும் இருக்க இருவரும் நெருக்கமாக காணப்பட்டனர். அதனால் மீண்டும் இருவரும் இணைந்து விட்டனர் என்ற தகவல் வைரலானது.

இதையும் படியுங்கள்: அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!

லிவிங் ரிலேஷன்சிப்

இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் ஷீத்தில் இதுகுறித்து தெளிவான பதிலை அளித்துள்ளார். அதில், நாங்கள் இருவரும் திருமணமே செய்துக்கொள்ளவில்லை. அதனால் விவாகரத்து என்ற விஷயமே நடக்கவில்லை. நான் என்ன பண்றேன்னு தொடர்ந்து கேள்விகள் கேட்கறீங்க. என்னோட இந்த சூழ்நிலையை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கறீங்க.

அதனால் எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால், நானும் பிருத்விராஜூம் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. நாங்க ரெண்டு பேருமே லிவிங் ரிலேஷன்சிப்ல தான் இருந்தோம்.

இடம் கொடுக்கணும்

ஆனா நாங்க நெனைச்ச மாதிரி அந்த ரிலேசன்ஷிப் போகலை. நாங்க சில மாதங்களாக பிரிஞ்சுதான் வாழறோம். நாங்க நல்லா இருக்கிறோம். இது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிற நேரம். நீங்க எல்லோரும் இதை மதிச்சு எங்களுக்கு அதுக்கு இடம் கொடுக்கணும் என்று தெளிவுபட அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

இப்படி ஆயிடுச்சே…

பப்லூவுக்கு திருமணம், மணப்பெண் ஷீத்தலுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவங்க, இப்போ ஷீத்தல் சொன்ன பதிலை பார்த்து ஷாக் ஆகி விட்டனர். என்ன பாஸ்.. இப்படி ஆயிடுச்சே என, பப்லூவை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.