அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!

அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் திரை உலகில் திருட்டு முழியுடன் உலா வந்த மிகச்சிறந்த குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாண்டியராஜனை யாராலும் மறக்க முடியாது.

நடிகர் பாண்டியராஜ்..

இவர் கன்னி ராசி என்ற படத்தில் 1985-ஆம் ஆண்டு அறிமுகமானார். அதனை அடுத்து 1985-ஆம் ஆண்டிலேயே ஆண் பாவம் என்ற திரைப்படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க: கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. நடிகர் கார்த்தி ஓப்பன் டாக்..!

மேலும் 1987-ல் மனைவி ரெடி 1988-ல் நெத்தியடி 1994-ல் சுப்பிரமணியசாமி 1997-இல் கோபாலா கோபாலா, கபடி கபடி 2006-ல் கை வந்த கலை போன்றவற்றில் நடித்திருக்கிறார்.

அப்பா இல்ல.. ரெண்டு தங்கச்சி.. கதறிய பாண்டியராஜன்..

இந்த சூழ்நிலையில் பாண்டியராஜன் திரைக்கு வருவதற்கு முன்பு பாக்கியராஜை சந்தித்து தனக்கு அப்பா இல்லை என்றும் இரண்டு தங்கச்சிகள் உள்ளார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கதறி அழுததை அடுத்து அவருக்கு தெலுங்கு நடிகர் ஒருவருக்கு வசனம் கற்றுக் கொடுக்கக்கூடிய வாய்ப்பை தந்தார்.


அதனைத் தொடர்ந்து அந்த ஆந்திர நடிகருக்கு வசனம் கற்றுக் கொடுத்த பாண்டியராஜன் ஷூட்டிங்கில் அந்த நடிகர் சரியாக வசனத்தை சொல்லாமல் அனைத்திலும் ல.. ல.. போட்டு பேசியதை அடுத்து உனக்கு வசனத்தை கற்றுக் கொடுத்தது யார் என்று கேட்டதை அடுத்து பாண்டியராஜை கை காட்டினார்.

யாரும் அறியாத ரகசியம்..

இதனை அடுத்து பாண்டியராஜனை அழைத்து இந்த வசனத்தை பேசச்சொல்லி பாக்யராஜ் சொல்ல வசனத்தை தெளிவாக கூறிய பாண்டியராஜன் கையில் வெறும் 11 ரூபாயை திணித்து நீ இந்த படத்தில் நடித்து விடு என்று சொன்னதோடு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்து நீ நல்ல நிலைக்கு வருவாய் என்று கூறினார்.

அந்த வார்த்தை தற்போது நிஜமாகி இன்று திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பாண்டியராஜன் பாக்கியராஜ் தனக்கு செய்த உதவியை இன்று வரை மறக்கவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: காசு சம்பாதிக்க வேற வழியே இல்லையா.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.. அனிதா சம்பத்தை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..

இதனைத் தொடர்ந்து இணையத்தில் இன்று அப்பா இல்ல.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன் பற்றிய அறிந்திடாத பல ரகசியங்களை ரசிகர்கள் தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அவற்றை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.