Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இறப்பதற்கு முந்தைய நாள் வடிவேலு குறித்து போண்டா மணி பேச்சு..! கண்ணீர் கடலில் ரசிகர்கள்..!

நடிகர் போண்டா மணி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவாக காரணமாக குறிப்பாக அவருடைய சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் வேலையில் மருத்துவர்கள் மும்முருமாக இருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தன.

கடந்த சில மாதங்களாக டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த போண்டா மணி நேற்று துரதிஷ்டவசமாக மரணமடைந்தார். இந்நிலையில், இறப்பதற்கு முந்தைய நாள் போண்டாமணி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் பேசிய விஷயங்கள் மனதை உருக்கும் விதமாக அமைந்திருக்கின்றன. அவர் கூறியதாவது, உடல்நிலை சரியில்லாமல் போனதும் எனக்கு ஊடகத்துறையினர்.. சின்னத்திரை சினிமா நடிகர்கள்.. என பலரும் எனக்கு உதவி செய்தார்கள்.

இந்த நேரத்தில் கேப்டன் விஜயகாந்தை நான் மிஸ் பண்றேன். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தால் இப்படி பலருடைய உதவிகளை எதிர்பார்த்து நான் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

--Advertisement--

நான் மட்டும் அல்ல சினிமா துறையில் அனைவருமே மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது சினிமா உலகம் எப்படி இருந்தது. அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி ஓடி வந்து உதவி செய்வார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் நடிகர்கள் அவர்களுடைய வாழ்க்கை.. அவர்களுடைய குடும்பம்.. அவர்களுடைய படம்.. என தனித்தனியாக பிரிந்து சென்று விட்டார்கள்.

இன்னும் சினிமா என்ன நிலைமைக்கு ஆளாக போகிறது என தெரியவில்லை. எனக்கு பட வாய்ப்பு கிடைக்கிறது.. கிடைக்கவில்லை.. இதெல்லாம் இரண்டாவது விஷயம். நான் நேசித்த சினிமா.. என்னை வாழவைத்த சினிமா தற்பொழுது திக்கு தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த Youtube, சமூக வலைதளங்கள் போன்ற விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் எங்களை போன்ற நடிகர்கள் எல்லாம் எப்போதோ காணாமல் போய் இருப்போம்.  இப்படியான சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் நாங்கள் வெளியே தெரிகிறோம்.

அந்த அளவுக்கு எங்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள். நடிகர் வடிவேலு எனக்கு ஒரு பைசா கூட கொடுத்து உதவி செய்யவில்லை. ஆனாலும் அவரை நான் மதிக்கிறேன். அவரால் தான் நான் வெளி உலகத்துக்கு தெரிய ஆரம்பித்தேன்.

வடிவேலு என்ற ஒருவர் இல்லை என்றால் போண்டாமணி என்ற ஒருவர் இல்லை. வடிவேல் அண்ணன் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. மறுபக்கம் நடிகர்கள் விஜய் அஜித் எல்லாம் 10 லட்சம் கொடுத்தார்கள் 20 லட்சம் கொடுத்தார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

அப்படி எல்லாம் யாரும் எதுவும் கொடுக்கவில்லை. விஜய் அஜித் கண்டிப்பாக அவர்களுக்கு நேரம் இருந்தால் உதவி செய்யக்கூடிய நபர்கள்தான். அவர்களையும் நான் குறை சொல்லவில்லை. அவர் அவர்களுக்கு என ஒரு வேலை தனிப்பட்ட வேலைகள் இருக்கின்றது.

எனக்கு தேவையான உதவிகள் கிடைத்திருக்கின்றது. இன்னும் நிறைய நண்பர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள். நான் விரைவில் இந்த உடல் நலப் பிரச்சினை என்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயார் ஆவேன் என கூறியிருக்கிறார் போண்டாமணி. அவருடைய இந்த பேச்சு ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top